India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகரில் மனித உயிர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் விதத்தில் பட்டாசு தயாரிப்பில் பட்டாசு தொழிற்சாலைகள் ஈடுபடுவதாக தெரியவந்தாலோ அல்லது உரிமமின்றி சட்ட விரோதமான முறையில் பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தாலோ, அது தொடர்பான விபரங்களை 9443967578 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் தகவல் தெரிவித்தார்.
விருதுநகரில் மனித உயிர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் விதத்தில் பட்டாசு தயாரிப்பில் பட்டாசு தொழிற்சாலைகள் ஈடுபடுவதாக தெரியவந்தாலோ அல்லது உரிமமின்றி சட்ட விரோதமான முறையில் பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தாலோ, அது தொடர்பான விபரங்களை 9443967578 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் தகவல் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் கலை இலக்கியம், கல்வி விளையாட்டு மற்றும் மருத்துவ துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு ”பத்ம விருது” வழங்கப்பட உள்ளது. எனவே தகுதி உடையவர்கள் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் www.padmaawards.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து சூலக்கரையில் உள்ள அரசினர் தொழிற்பெயர்ச்சி நிலையத்தில் நாளை சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலைநாடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
சாத்தூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வின்போது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியரிடம் தனது மகன் மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை கேட்டு வந்த பயனாளி ஒருவரிடம் மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் ஜெயசீலன் உடனடியாக அந்த மாற்றுத் திறனாளிக்கு உதவி தொகை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர
விருதுநகர் மாவட்ட பாஜக பார்வையாளர் வெற்றிவேல் இவர் சாத்தூர் சென்று விட்டு விருதுநகருக்கு வருவதற்காக நான்கு வழி சாலையில் ஆர்ஆர்நகர் அருகே நேற்று மதியம் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்டர் மீடியனில் புல்களை மாடு மேய்ந்து விட்டு மேற்குப் பக்கம் செல்வதற்காக சாலையை கடந்தது. அப்பொழுது வேகமாக வந்த கார் மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக வச்சகாரப்பட்டி போலீசார் வழக்கு.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறை தீர்க்கும் நாள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்களிடமிருந்து 28 புகார் மனுக்கள் பெறப்பட்டு, மேற்படி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்தார்.
சிவகாசி அருகே பூவநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோசலை (65).இவர் நேற்று சுந்தரராஜபுரத்தில் உள்ள தன் மகன் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் பூவநாதபுரதிற்கு அரசு பேருந்தில் வந்துள்ளார்.அப்போது கோசலை அருகில் அமர்ந்திருந்த பெண் கோசலை அணிந்திருந்த 4 பவுன் செயின் அறுந்துள்ளதாக கழட்டி பையில் வைக்க சொல்லியுள்ளார்.அதைக் கேட்டு பையில் வைத்த செயினை வீட்டில் வந்து பார்த்தபோது செயின் மாயமானது தெரியவந்தது.
சாத்துார் விருதுநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள பள்ளத்தில் தேங்கிய கழிவுநீரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இச்சாலையில் தீப்பெட்டி பண்டல் ஏற்றி வரும் லாரிகள்,லோடு வேன்கள்,இருசக்கர வாகனங்கள் அடிக்கடி இவ்வழியாக நகருக்கு வந்து செல்கின்றன.சர்வீஸ் ரோட்டில் மிகப்பெரிய பள்ளம் உள்ள நிலையில் வேகமாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
Sorry, no posts matched your criteria.