India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையில் ரூ.25 கோடி செலவில் எம்.சாண்ட் உற்பத்தி தொடங்கப்படும் என நேற்று நடைபெற்ற சட்டசபை மானிய கோரிக்கையில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சிமெண்ட் ஆலையை புனரமைக்க வலியுறுத்தி ஆலை கமிட்டினர் போராடிவரும் நிலையில், இந்த அறிவிப்பு சற்று ஆறுதலை தந்தாலும் ஆலையை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையில் ரூ.25 கோடி செலவில் எம்.சாண்ட் உற்பத்தி தொடங்கப்படும் என இன்று நடைபெற்ற சட்டசபை மானிய கோரிக்கையில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சிமெண்ட் ஆலையை புனரமைக்க வலியுறுத்தி ஆலை கமிட்டினர் போராடிவரும் நிலையில், இந்த அறிவிப்பு சற்று ஆறுதலை தந்தாலும் ஆலையை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.
விருதுநகர் அருகே மீசலூர் கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி மாரியப்பன் என்பவரின் வீடு சேதமடைந்திருப்பதால் வீட்டினை சீரமைக்க உதவிடுமாறு ஆட்சியரிடம் மனு அளித்ததன் பேரில், மனுவின் உண்மைத்தன்மை குறித்து பரிசீலனை செய்து, தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.1.40 இலட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட வீட்டினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று(ஜூன் 28) திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் துணை ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா இன்று உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் பணியாற்றும் போத்தி, சாத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் அழகர்சாமி, கட்டணூரில் பணியாற்றும் வேல்முருகன், வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் காசிராஜன் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மானியக்கோரிக்கை கூட்டம் நடைபெறும் முன்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் அப்பாவுவை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் நேற்று(ஜூன் 27) நேரில் சந்தித்தார். உடன் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் உட்பட 8 மாவட்டங்களில் இன்று(ஜூன் 27) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 16 புகார் மனுக்களும் காவலர்களிடமிருந்து 54 மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 16 புகார் மனுக்களும் காவலர்களிடமிருந்து 54 மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் இன்று மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024 2025-ம் நிதி ஆண்டிற்கான ரூ.30896.43 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் வெளியிட்டார்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதன்படி இன்று இரவு 7 மணி வரை விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Sorry, no posts matched your criteria.