Virudunagar

News July 4, 2024

கடந்த 4 ஆண்டுகளில் பட்டாசு விபத்தால் பலியானோரின் எண்ணிக்கை

image

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 63 விபத்துகள் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 63 விபத்தில் 148 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 108 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு உற்பத்தியை அதிகரிக்க ஒப்பந்த முறையை பின்பற்றுவதால் தான் விபத்துகள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News July 3, 2024

283 நீர்நிலைகளில் மண் எடுக்க அனுமதி

image

விருதுநகர் மாவட்டத்தில் 283 நீர்நிலைகளில் வண்டல் மண், களிமண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வத்திராயிருப்பில் 49, சிவகாசியில் 11, ராஜபாளையம் 44, காரியாபட்டி 16, திருச்சுழி 47, விருதுநகர் 13, சாத்துார் 28, ஸ்ரீவில்லிபுத்துார் 46, அருப்புக்கோட்டை 17, வெம்பக்கோட்டை 12, என 283 நீர் நிலைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மண் எடுக்க விருப்பம் உள்ள மண்பாண்டத் தொழிலாளர்கள் தாசில்தாரை அணுகலாம்.

News July 3, 2024

விருதுநகர்: அரசினர் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகர் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 01.07.2024 முதல் 15.07.2024 வரை நடைபெறுகிறது. இதற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்திர உதவித்தொகை ரூ.750/- வழங்கப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 28 புகார் மனுக்களும் காவலர்களிடம் இருந்து 40 மனுக்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகளை உத்தரவிட்டார்.

News July 2, 2024

தமிழ்நாடு நாள் – பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

image

ஜூலை 18ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மட்டும் பேச்சு போட்டிகள் வரும் 9ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நூலக அலுவலக கட்டிடத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று (ஜூலை 2) தகவல் தெரிவித்துள்ளது.

News July 2, 2024

விருதுநகர்: ஜூலை.16ல் ஓய்வூதியர்கள் குறைதீர்க்க கூட்டம் 

image

விருதுநகரில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 16ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று அறிவித்துள்ளார்.  சென்னை ஓய்வூதிய இயக்குநா் தலைமையில், அரசுத்துறையில் ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதால் ஓய்வூதியம் தொடா்பான குறைகளை நிவா்த்தி செய்து கொள்ள விரும்பும் ஓய்வூதியா்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு  ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். 

News July 1, 2024

மீண்டும் சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி போட்டியா?

image

விருதுநகர்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பெற்றார். பின் 2021 சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் யில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தது அரசியலில் பேசு பொருளாக மாறிய நிலையில், வரும் 2026 தேர்தலில் மீண்டும் சிவகாசியில் போட்டியிட தயாராகி அதற்கான பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.

News July 1, 2024

விருதுநகர்: பட்டாணி, சர்க்கரை விலை குறைந்தது

image

விருதுநகர் மார்க்கெட்டில் பட்டாணி மற்றும் சர்க்கரை விலை குறைந்தது. சர்க்கரை 100 கிலோவிற்கு ரூ.80 விலை குறைந்து ரூ.4,180 ஆகவும், பட்டாணி 100 கிலோவிற்கு ரூ.1,500 குறைந்து ரூ.4,500 ஆகவும் விற்பனையானது. கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.50 விலை குறைந்து ரூ.2,750 ஆக விற்பனையானது

News July 1, 2024

விருதுநகரில் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி

image

விருதுநகரில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூலை 6 காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் இன்று காலை 11 மணி முதல் சங்க அலுவலகத்திற்கு நேரில் வந்து முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9486553544, 6374050289 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

News June 30, 2024

98 பட்டாசு ஆலைகளின் உரிமம் இடைநிறுத்தம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதத்தில் சிறப்பு குழுக்கள் மூலம் 98 பட்டாசு ஆலைகள் விதிமுறைகள் மீறியது கண்டறியப்பட்டு, அதன் உரிமங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆலை உரிமம், பணியாளர்கள் அடங்கிய பெயர் பலகை வைக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!