Virudunagar

News July 8, 2024

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 28 பயனாளிகளுக்கு தலா 10,000 ரூபாய் வீதம் உதவித்தொகைகளையும், 1 பயனாளிக்கு ரூபாய் 20,000 விதம் என 29 பயனாளிகளுக்கு ரூபாய் 3 லட்சம் மதிப்பில் உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

News July 8, 2024

வண்டல் மண் எடுக்க அனுமதி அணை

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 8) அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி குளம் மற்றும் கண்மாயிலிருந்து களிமண், வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு கட்டணமின்றி எடுத்துச் செல்லும் திட்டத்தை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஊரக முகமை வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் ஜெயசீலன் 10 விவசாய பெருமக்களுக்கு மண் எடுப்பதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.

News July 7, 2024

நிலம் தொடர்பான மனு – ஆட்சியரகம் தகவல்

image

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிலம் தொடர்பான மனுக்கள் அதிக அளவில் அளிக்கப்படுவதால், ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணி முதல் 12:30 மணி வரை நில எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா ரத்து தொடர்பான மனுக்கள் குறித்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று (ஜூலை 7) தகவல் தெரிவித்துள்ளது.

News July 7, 2024

மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 91 ஊராட்சிகளில் தோட்டக்கலைத் துறை மூலம் ஏக்கருக்கு 75% மானியத்தில் காய்கறி விதைகள், இடுபொருட்கள், மா, சப்போட்டா, கொய்யா தொகுப்பும் அடங்கிய பயனாளிகளின் பங்குத் தொகையுடன் விநியோகம் செய்யப்பட உள்ளது. தேவைப்படுவோர் உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.

News July 7, 2024

காரியாபட்டி போலீசுக்கு டிஜிபி பாராட்டு

image

ராஜபாளையம் மற்றும் பல்வேறு இடங்களில் நடந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை காரியாபட்டி தலைமைக் காவலர் சிவபாலன் கைது செய்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள 200 சவரன் நகை, ரூ.4 கோடி சொத்து ஆவணங்களை மீட்க உறுதுணையாக இருந்தார். இந்நிலையில், காரியாபட்டி தலைமைக் காவலர் சிவபாலனை சென்னைக்கு நேரில் அழைத்து காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் அவரது பணியை வெகுவாக பாராட்டினார்.

News July 5, 2024

அகழாய்வில் புதைந்து கிடந்த ஆச்சரியம்

image

வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் இன்று நாயக்கர் கால செப்புக் காசு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் கி.பி.16ம் நூற்றாண்டைச் சார்ந்த மதுரை நாயக்க மன்னரான வீரப்ப நாயக்கர் காலத்தில் புழக்கத்தில் இருந்துள்ளது. இதன் முன் பக்கத்தில் சிவபெருமான் அமர்ந்த நிலையிலும் பின்பக்கத்தில் “ ஶ்ரீ வீர” என்ற தெலுங்கு எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2024

காப்பி வித் கலெக்டர் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஜூலை 5) தனியார் பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 50 பள்ளி மாணவர்களுடனான காப்பி வித் கலெக்டர் என்ற 75 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

News July 5, 2024

நாயக்கர் கால செப்புக் காசு கண்டெடுப்பு – தங்கம் தென்னரசு

image

வைப்பாற்றின் வடகரை பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த பண்டைய கால மக்களின் வரலாற்றை அறியும் வகையில் வெம்பக்கோட்டையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 3ம் கட்ட அகழாய்வை ஜூன்.18 இல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வீரநாயக்கர் கால செப்புக் காசு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

மாவட்டத்தில் 283 இடங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி

image

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் கட்டணமில்லாமல் வண்டல், களிமண் எடுக்க tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். சிவகாசியில் 11, இராஜபாளையம் 44, காரியாபட்டி 16, திருச்சுழி 47, விருதுநகர் 13, சாத்தூர் 28, ஸ்ரீவி 46, அருப்புக்கோட்டை 17, வெம்பக்கோட்டை 12 என மொத்தம் 283 இடங்கள் தகுதி வாய்ந்த நீர் நிலைகளாக கண்டறியப்பட்டுள்ளது.

News July 4, 2024

கால்நடை வளர்ப்போருக்கு முக்கிய அறிவிப்பு

image

விருதுநகரில் கால்நடை பராமரிப்புத்துறை ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மானிய விலையில் பசுந்தீவன பயிர்கள் பயிரிட விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். மேலும் விருப்பமுள்ள கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற 20.07.24-க்குள் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!