Virudunagar

News July 12, 2024

ஒரே நாளில் இரண்டு கொலைகள்

image

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாத்து மேய்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வீரகுரு என்பவரை அவரது அண்ணன் வீரபாண்டி என்பவர் நேற்று கத்தியால் குத்தி கொலை செய்தார். இதேபோல் காரியாபட்டி அருகே திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்ட இளம்பெண்ணை மத்திய சேனையை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். ஒரே நாளில் மாவட்டத்தில் இரு கொலைகள் நடத்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 12, 2024

4000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் அடிக்கடி வெடி விபத்து ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் சுமார் 200 ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதில் பணியாற்றிய சுமார் 4000 தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

News July 11, 2024

கழிவு செய்யப்பட்ட 55 அரசு பேருந்துகள்

image

விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் முதல் ஜூன் வரை இயக்க தகுதியற்ற 55 அரசு பஸ்கள் கண்டம் செய்யப்பட்டு, புதிதாக 36 அரசு பஸ்கள் அந்தந்த வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருவதாக விருதுநகர் அரசு போக்குவரத்து கழக மேலாளர் துரைசாமி தெரிவித்துள்ளார். மேலும், கூடுதலாக 26 அரசு பேருந்துகள் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

வெம்பக்கோட்டையில் அகழாய்வு குழிகள் அதிகரிப்பு

image

வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஜூன் 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை 500க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக 3 அகழாய்வு குழிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 2 புதிய அகழாய்வு குழிகள் உருவாக்கப்பட்டு அவற்றில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருவதாக இணை இயக்குனர் பொன் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

ஐஐடியில் சேரும் ஆட்டோ ஓட்டுனர் மகன்

image

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர் பாரத்தசாரதி (17). இவரின் தந்தை ஆட்டோ ஓட்டுனர். பார்த்த சாரதி JEE மெயின் நுழைவு தேர்வில் 112 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். தற்போது அவர், சென்னை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிக்க உள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

News July 11, 2024

விருதுநகரில் 2 மாதத்தில் 18 பேர் உயிரிழப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் பட்டாசு ஆலைகளில் விபத்துகளில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 9ம் தேதி செங்கமலப்பட்டி சுதர்சன் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 12 பேரும், 29ம் தேதி சாத்தூர் பந்துவார்பட்டியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேரும், ஜூலை 9ல் காளையார்குறிச்சி சுப்ரீம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

News July 10, 2024

ஜூலை மாதம் முழுவதும் பெற்றுக்கொள்ளலாம் – ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் 1029 ரேஷன் கடைகளிலும் கடந்த ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்காக ஜூலை மாதம் முழுவதும் வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனவே துவரம் பருப்பு, பாமாயில் பெறாத அட்டைதாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (ஜூலை 10) தகவல் தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 65 முகாம்கள்

image

விருதுநகரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதம் 69 முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போது இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. 15 அரசு துறைகளைச் சேர்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News July 10, 2024

பட்டாசு ஆலை விபத்து-உடல்கள் ஒப்படைப்பு

image

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் சுப்ரீம் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் மாரியப்பன் (65), முத்து முருகன் (53) ஆகிய இரு தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இருவரது உடல்களும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பட்டாசு ஆலையில் நிர்வாகம் சார்பில் இருவரது குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

News July 9, 2024

விருதுநகர்: வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். காளையார்குறிச்சியில் உள்ள சுப்ரீம் பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் படுகாயத்துடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!