India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கமுதியை சேர்ந்த மூக்கையா என்பவர் காளையார்கரிசல்குளத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான செல்வக்குமார், முருகன் ஆகியோருக்கு கடன் கொடுத்துள்ளார். 2018 இல் கடனை திருப்பிக் கேட்ட போது மூக்கையாவை காரியாபட்டி அருகே உள்ள ஆலங்குளம் கண்மாய் பகுதியில் வைய்த்து செல்வக்குமார், முருகன், சோனைபாண்டி ஆகியோர் எரித்து கொலை செய்தனர். இவர்கள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுநகருக்கு வருகை புரிந்தார். அப்போது அவரை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் புத்தகம் வழங்கி வரவேற்றனர்.
விண்வெளி தொழில் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய மற்றும் விரிவாக்க தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், விருதுநகர் மாவட்டம் (Space bay) விண்வெளி தொழில் விரிவாக்க மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே காளையார்குறிச்சி சுப்ரீம் பட்டாசு ஆலையில் கடந்த 9 ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
மேலும் தீக்காயமடைந்த சரோஜா, சங்கரவேல் ஆகிய இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சரோஜாவும் இன்று காலை சங்கரவேல் ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் இன்று குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் குரூப் 1 தேர்வு 25 மையங்களில் நடைபெற்று வருகிறது. 25 தேர்வு மையங்களில் மொத்தம் 6,900 நபர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். மேலும் தேர்வு மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகாசி, காளையார்குறிச்சியில் முருகவேலுக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஜூன்.9 அன்று உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மாரியப்பன்(45), முத்து மருகன்(45) ஆகியோர் உயிரிழந்தனர். இதில் மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சரோஜா(55) என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் பட்டாசு வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜூலை 12) அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. இன்டர்நேஷனல் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுடனான Coffee With Collector என்ற 78-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் மாணவர்களுடன் கலந்துரையாடி கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜூலை 12) தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய பேரிடர்களை எதிர்கொள்வது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் மற்றும் TNSDEM செயலியில் பேரிடர் காலங்களில் முக்கியமான தரவுகளை பதிவேற்றம் செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில், பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென் மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 5 மணி வரை ) விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.