Virudunagar

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

image

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT

News August 14, 2024

தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

image

விருதுநகர் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஆக.16 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. எனவே வேலை நாடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (14.08.24) தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2024

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு

image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி அருகே, மாயத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று(ஆக.,14) காலை சுமார் 10 மணி அளவில் அந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர். காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

News August 14, 2024

கடன் செயலிகளில் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று(ஆக.,12) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் மட்டும் கடன் பெறுமாறும், அதிக வட்டி வசூலிக்கும் & கடன் செயலிகள் மூலம் கடன்களைப் பெற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் இது போன்ற செயலிகளில் கடன் பெறாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News August 14, 2024

பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் மட்டும் கடன் பெறுமாறும் அதிக வட்டி வசூலிக்கும் மற்றும் கடன் செயலிகள் மூலம் கடன்களைப் பெற வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் இது போன்ற செயலிகளில் கடன் பெறாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு ஆட்சியர் ஜெயசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News August 13, 2024

ஆட்சியர் தலைமையில் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆக.13) சிவகாசி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 4 அரசு உதவி பெறும் பள்ளியை சார்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான “காபி வித் கலெக்டர்” 95வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு கல்லூரி, தேர்வு, உயர் கல்வி, வேலை வாய்ப்பு குறித்து எடுத்துரைத்தார்.

News August 13, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான உரிமை ஸ்தலங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 13, 2024

ராஜபாளையத்தில் தலை துண்டித்து கொடூர கொலை

image

ராஜபாளையம் அய்யனார் கோயில் சாலையில் உள்ள முடங்கையாறுப் பாலத்தின் பக்கவாட்டு சுவரின் மீது இன்று காலை ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் துண்டிக்கப்பட்ட தலையை மட்டும் மீட்டு விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த பூவையா என்பது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை மீட்க சுந்தரராஜபுரம் சென்றுள்ளனர்.

News August 13, 2024

விருதுநகர் புது SP அறிவுறுத்தல்

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் கள்ளத்தனமாக பட்டாசு தயாரிப்பவர்களை கண்டறிய தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வெடி விபத்துகள் ஏற்படா வண்ணம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும், சமூகத்தில் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!