India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் நகராட்சி 30 வது வார்டில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் 21 வது கால்நடை கணக்கெடுப்பு பணியினை நேற்று (25.10.24) மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். 21 ஆவது கால்நடை கணக்கெடுப்பு 2024 அறிவுரை கையேட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கினார்.
தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரயில் எண்.06088 ஷாலிமார் – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் ஷாலிமாரில் இருந்து அக்டோபர் 26 அன்று காலை 17.10 மணிக்குப் புறப்பட வேண்டிய சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு ரயில் தாமதம் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கவிதா நகர் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டன. இதுகுறித்து Way2 வில் செய்தியாக வெளியிடப்பட்டது. செய்தியின் எதிரொலியாக ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றியதுடன் அங்கு குப்பைகள் கொட்டுபவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிவகாசி விஸ்வநத்தம் பகுதியில் மாரியம்மன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் அரசு அனுமதியின்றி பட்டாசு பார்சல்கள் வைத்திருந்தாக கூறி வருவாய்துறையினர் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இது குறித்து சிவகாசியை சேர்ந்த வாசுகி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் வருவாய் துறைக்கு சீல் வைக்கும் அதிகாரம் இல்லை எனக்கூறி சீலை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நிதி ஆயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட முன்னேற விளையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டம் மற்றும் முன்னேற விளையும் வட்டாரமான திருச்சூழி வட்டாரத்திற்கு முழு நிறைவு திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 6 இலக்குகளை 100% முழுமையாக அடைவதற்கு சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் ஜெயசீலன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் கீழ ராஜகுலராமன் கிராமத்தில் ஊரணி ஆக்கிரமிப்பில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை வருவாய்த் துறையினர் அகற்றி உள்ளனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீனிவாசன் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் கிராமத்து மக்கள் 90 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
ஸ்ரீவி நகராட்சியில் 4 பில் கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதில் ஆனந்தராஜ் கம்பம் நகராட்சிக்கும்,வசந்தி விருதுநகர் நகராட்சிக்கும், சுரேஷ்குமார் பெரியகுளம் நகராட்சிக்கும், பாண்டிச்செல்வி உசிலம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஸ்ரீவி.நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக சொத்து வரி வசூலில் 100% நிறைவு செய்துள்ள நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டது ஊழியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று இரவு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அக்.28 அன்று பூரம் நட்சத்திரத்தன்று நந்தவனத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று இரவு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அக்.28 அன்று பூரம் நட்சத்திரத்தன்று நந்தவனத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அப்பகுதிக்கு சென்று போலீசார் சோதனை செய்ததில் காளிராஜ்(36), மாயக்கண்ணன்(39), செந்தில்குமாரி(35) ஆகியோர் தகரக் கூடாரத்தில் பேன்சிரகப் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் பட்டாசுகளை பறிமுதல் செய்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.