India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்துகளை தடுக்க கடந்த 6 மாதங்களாக பட்டாசு ஆலைகளில் விதிமீறல் குறித்து 9 குழுக்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் இதுவரை 169 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், குறைகள் சரி செய்யப்பட்ட 50 பட்டாசு ஆலைகளுக்கு மீண்டும் உரிமம் வழங்கி உத்தரவிடப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆயிர வைசியா மேல்நிலைப்பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்த காளீஸ்வரி என்பவர் பணியின் போது மரணமடைந்தால் அவரது வாரிசுதாரரான ஞானசுந்தரி என்பவருக்கு சாத்தூர் புனித தனிஸ்லாஸ் மேல்நிலைப்பள்ளியில் சமையல் அமைப்பாளராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையினை ஆட்சியர் கருணை அடிப்படையில் வழங்கினர். இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 22) நடைபெற்றது.
விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய் மற்றும் பருப்பு விலை உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக பாசிப்பருப்பு 100 கிலோ மூட்டை ரூ.200 விலை உயர்ந்து ரூ10,250 முதல் ரூ.10,400 வரையிலும், துவரம் பருப்பு 100 கிலோ மூட்டை ரூ.500 விலை உயர்ந்து ரூ.15,000 முதல் ரூ.15,800 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.165 விலை உயர்ந்து ரூ.6,435 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகரில் காரிப் பருவத்தில் பிரிமியம் தொகையாக வாழைக்கு ரூ.3404, வெங்காயம் 1 ஏக்கருக்கு ரூ.1744 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாழை பயிருக்கு சிவகாசியில் மங்கலம், திருத்தங்கல், நத்தம்பட்டி வெங்காயத்திற்கு காரியாபட்டி, முடுக்கன்குளம், ஸ்ரீவி, மல்லி விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என தோட்டங்கலை துணை இயக்குனர் சுபா தெரிவித்துள்ளார். காப்பீடு செய்ய வெங்காயத்திற்கு ஆக்.31, வாழைக்கு செ.16 கடைசி நாள்.
விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா இன்று (ஜூலை 21) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நர்சரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து பல மரக்கன்றுகள், தென்னங்கன்றுகள், பணப்பயிர் மரக்கன்றுகளில் உண்மை தன்மை அட்டையை கட்டாயம் பொருத்த வேண்டும். அதில் நர்சரி உரிமையாளரின் கையொப்பத்துடன் மரத்தின் பெயர், ரகத்தின் பெயர் குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்- சாத்தூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், புதிய புதிய ஆட்சியர் கட்டிடம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.70.57 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆகஸ்ட் இறுதி வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இப்புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல்கட்ட கட்டுமான பணிகள் 10% முடிந்துள்ளதாக விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமநாதபுரத்தில் படித்து வரும் எய்ம்ஸ் மாணவர்களை தற்காலிகமாக மதுரைக்கு இடமாற்றம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் இன்று (ஜூலை 20) காஃபி வித் கலெக்டர் 83வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், யூ-டியூப் பிரபலங்கள் கோபி சுதாகர் கலந்துகொண்டு விஷுவல் கம்யூனிகேசன் துறையில் ஆர்வம் கொண்ட 100 பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அனுப்பங்குளத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கடந்த மே 28ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, சரவெடி பட்டாசுகளை அழித்து குடோனின் சீலை அகற்றிவிடலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ரூ.4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட சரவெடி ரக பட்டாசுகளை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் இன்று (ஜூலை 20) அழித்தனர்.
Sorry, no posts matched your criteria.