Virudunagar

News August 16, 2024

ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை, விருதுநகரில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து முறையாக கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கோரி வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ் தாக்கல் செய்த மனுவில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2024

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “உணவகங்களில் எண்ணெய் வகைகளை மீண்டும் உபயோகிக்க கூடாது; உணவகங்களில் பணி புரியும் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்; உணவகங்களில் பூச்சிகள் ஈக்கள் புகாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; விதிமுறைகளை பின்பற்றாத உணவக வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2024

“நடமாடும் வாகனங்களில் கன்று வாங்க வேண்டாம்”

image

விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா இன்று, “பழமர சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் பழமரகன்று, தென்னங்கன்றுகள் வாங்குவதற்கு நர்சரிகளுக்கு செல்லும்போது பழ மரக்கன்றுகளின் உண்மை தன்மையை அறிந்து வாங்க வேண்டும்; நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனைக்கு வரும் கன்றுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும்; மேலும், விற்பனை ரசீதை நர்சரி உரிமையாளரிடம் கேட்டு பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

விருதுநகரில் விதிமுறை மீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என தொழிலாளர் நலத்துறை சார்பில் நேற்று (ஆக.15) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 131 நிறுவனங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டது. இந்நிறுவனங்கள் மீது தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

News August 16, 2024

சதுரகிரி கோவிலுக்கு நாளை முதல் அனுமதி

image

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக ஆகஸ்ட் 17 முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என  வனத்துறையினர் தெரிவித்தனர்.

News August 16, 2024

விருதுநகரில் 463 பேருக்கு விருது வழங்கிய ஆட்சியர்

image

விருதுநகரில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் ஜெயசீலன் பல்வேறு அதிகாரிகளுக்கு விருது வழங்கினார். இதில், சிறப்பாக பணியாற்றிய 101 போலீசார், 2 தீயணைப்புத்துறை வீரர்கள், மாவட்ட நிலை அலுவலர்கள் 20 பேர் உள்பட் 463 பேருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் 3பேர், 2 பேருக்கு பசுமை சாதனையாளர் விருது ஆகியனவும் வழங்கப்பட்டன.

News August 15, 2024

நாளை பட்டாசு ஆலைகள் இயங்காது

image

சிவகாசியில் சுமார் 1100 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் ஆண்டுதோறும் ஆடி முதல் தேதி மற்றும் கடைசி தேதியன்று பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாத கடைசி நாளான நாளை அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது குலதெய்வ வழிபாடு, சுற்றுலா தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

News August 15, 2024

பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்

image

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா நாளை நடைபெறுகிறது. திருவிழாவிற்காக தென் மாவட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் இருக்கன்குடியில் வந்த வண்ணம் உள்ளனர். மதியம் 12 மணிக்கு மேல் அம்மன் வீதி உலா நடைபெறும். சாத்தூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News August 15, 2024

விருதுநகரில்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் அருகே சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் நாளை (ஆக.16) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலைநாடுபவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

News August 15, 2024

மாவட்டத்தில் பின்தங்கிய 41 பள்ளிகளுக்கு சிறப்பு கவனம்

image

2024 – 25 கல்வியாண்டின் காலாண்டு தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பின்தங்கிய பள்ளிகளுக்கு தனிக் கவனம் செலுத்தி தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 26 பள்ளிகள், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 15 பள்ளிகள் என 41 பள்ளிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

error: Content is protected !!