India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக நீதிமன்றம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மாவட்டத்தில் 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், ராஜபாளையத்தில் சார்பு நீதிமன்றம், வத்ராப், காரியாபட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இவை ஜூலை.26 முதல் செயல்பட உள்ளது.
விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி தனது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று இரவு தங்கத்தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். உடன் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்பட கட்சியினர் பலர் இருந்தனர்.
ஸ்ரீவி அருகே அச்சம்தவிழ்த்தான் பகுதியைச் சேர்ந்தவர் சின்னகுருசாமி. இவர் அதிமுக கிளைச் செயலாளராக இருந்து வந்தார். இவருக்கும் அவரது உறவினரான மணிகண்டன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததையடுத்து நேற்றிரவு நூலகம் அருகில் வைத்து சின்னகுருசாமி உடன் மணிகண்டன் தகராறில் ஈடுபட்டார். இன்று காலை நூலகம் முன் சின்னகுருசாமி இறந்து கிடந்தார். வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கிருஷ்ணன்கோவில் குளோபல் சிபிஎஸ்சி பள்ளியில் பயிலும் 70 மாணவ மாணவிகளுடன் காப்பி வித் கலெக்டர் என்ற 85 ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு பள்ளி மாணவருடன் கலந்துரையாடினார். மேலும் கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 26ஆம் தேதி காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விளாத்திகுளம், மீளவிட்டான் வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிமீ தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க 2011- 12 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 339 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.2053 கோடி. இத்திட்டத்திற்கு இன்றைய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகாசி அர்பன், பாறைப்பட்டி, நாரணாபுரம் ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (ஜுலை.23) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகாசி அர்பன், பாறைப்பட்டி, நாரணாபுரம் துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரி பத்மா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (22.07.2024) மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் பயிலும் 50 பள்ளி மாணவர்களுடனான ‘Coffee With Collector’ என்ற 84வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலெக்டர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கான போட்டித் தேர்வு நேற்று மூன்று மையங்களில் நடைபெற்றது. மொத்தம் மூன்று மையங்களில் 1051 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 1000 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மேலும் 51 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) கடந்த 16ஆம் தேதி முதல் வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.