Virudunagar

News November 1, 2024

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (நவ.2) மின்தடை ஏற்படும் இடங்கள்: ராஜபாளையம் தாலுகா அலுவலகம், பஞ்சு மார்க்கெட், முடங்கியார் ரோடு, சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கம்பட்டி, அட்டைமில் முக்கு ரோடு,
கீழராஜகுல ராமன், அழகாபுரி, ஆப்பனூர், சேத்தூர், தேவதானம், தளவாய்புரம், முகவூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம் வடமலாபுரம், ஜமீன் கொல்லங் கொண்டான் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை.

News October 31, 2024

சிவகாசி பட்டாசுகள் நாடு முழுவதும் 6000 கோடிக்கு விற்பனை

image

சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ.6000 கோடிக்கு விற்பனையானதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் ரவிதுரை தகவல் தெரிவித்துள்ளார். மழை உள்ளிட்ட காரணங்களால் 75% மட்டுமே பட்டாசு உற்பத்தி நடைபெற்றதாக தெரிவித்தார்.

News October 31, 2024

விருதுநகர் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் ஒப்புதல்

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தை ரூ.75.85 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.30) ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டம் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 36,000 மக்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 31, 2024

ஆண்டாள் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சம்

image

108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில், ஆண்டாள் கோயிலில் 17 இடங்களில் இருந்த உண்டியல்களை கோயில் மைய மண்டபத்திற்கு கொண்டு வந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அதில் ரூ.11,01,695 காணிக்கை வசூலாகியுள்ளது.

News October 31, 2024

மூதாட்டி கொலை வழக்கில் இளைஞர் கைது

image

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள்(48). இவரது கணவர் குருசாமி உயிரிழந்த நிலையில் தாய் லட்சுமி(89) உடன் வசித்து வந்தார். இவருக்கு மலைக்கனி என்பவரிடம் பழக்கம் இருந்துள்ளது. இதையறிந்த லட்சுமி மகள் மாரியம்மாளுடன் இருந்த உறவை துண்டிக்குமாறு மலைக்கனியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மலைக்கனி லட்சுமியை கொலை செய்தார். வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்து மலைக்கனியை கைது செய்தனர்.

News October 30, 2024

விருதுநகரில் மோசடி செய்த மேனேஜர் கைது

image

விருதுநகர் அருகே சூலக்கரை சிட்கோவில் உள்ள தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் சிவராஜா என்பவர் 2019 ஜூலை முதல் 2024 ஜூலை வரை வேலை செய்துள்ளார். அப்போது வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் போலி கையெழுத்திட்டு ரூ.3.82 லட்சம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மண்டல மேலாளர் ஆண்டனி ஸ்டீபன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவராஜாவை சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.

News October 30, 2024

மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

விருதுநகர் மாவட்டத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,77,364 ஆகும். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 70 ஆயிரத்து 642. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 6 ஆயிரத்து 473 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 245 பேர் ஆகும். இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டார்.

News October 30, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டம் முழுவதும் குழந்தைகள், முதியோர், மன வளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் உள்ளிட்ட இல்லங்களில் அனைவரும் முறையான சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

விருதுநகர் ஆட்சியர் பெயரில் போலி முகநூல்!

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி அதில் உள்ள நண்பர்கள் பட்டியலுக்கு தான் ஆட்சியர் ஜெயசீலன் என அறிமுகமாகி, ராணுவத்தில் பணியாற்றும் தனது நண்பரிடம் வீட்டு உபயோக பொருட்களை சலுகை விலையில் வாங்கிக் கொள்ளுமாறு வலியுறுத்தி முகநூலில் உரையாடி நூதன மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் இதேபோல் மோசடியில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது

News October 29, 2024

விருதுநகர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியில் செல்பர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*SHARE பண்ணுங்க*

error: Content is protected !!