Virudunagar

News November 2, 2024

விருதுநகர் மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நாளை விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News November 2, 2024

அய்யனார்கோயில் ஆற்று வெள்ளப்பெருக்கில் 9 பேர் சிக்கி தவிப்பு

image

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆற்றில் சற்றுமுன்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 9 பேர் மறுகரையில் சிக்கித் தவித்தனர். தண்ணீர் அதிகமாக செல்வதால் சிக்கிக் கொண்டவர்களை உடனடியாக மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராஜபாளையம் தீ அணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

News November 2, 2024

சிவகாசியில் 100 டன் குப்பைகள் அகற்றம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் 48 வார்டுகளிலும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் பட்டாசு வெடித்ததன் மூலம் வெளியான குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 100 டன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.

News November 2, 2024

பட்டாசு தீப்பொறிபட்டு தீ விபத்து

image

சிவகாசி புதுத்தெருவில் வசிப்பவர்கள் காளிராஜன் ( 55). இவர் தனது மருமகன் வசந்தகுமாருடன் பைக்கில் பட்டாசு வாங்கிக்கொண்டு புதுத்தெரு நோக்கி சென்றனர். அப்போது அங்கு பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்தவர்கள் தூக்கி எறிந்த பட்டாசின் தீப்பொறி பட்டு தீ விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். காளிராஜன் 90% தீக்காயத்துடனும், வசந்த்குமார் 10% தீக்காயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர்.

News November 2, 2024

ஸ்ரீவி: மலையேற்றத் திட்டம் நாளை முதல் அமல்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், வனச்சரக எல்கைக்கு உட்பட்ட பகுதியில் அறிவிக்கப்பட்ட மலையேற்றத் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் நாளை (நவ.3) முதல் நடைமுறைப்படுத்துகிறது. இத்திட்டம் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் மற்றும் வனத்துறையின் கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் www.trektamilnadu.com என்ற தளத்தில் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

News November 2, 2024

சிறுத்தையை கண்காணிக்க கேமரா பொருத்தம்

image

ஸ்ரீவி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்துக்குள் சிறுத்தை ஒன்று நடமாடுவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்த நிலையில் தனியார் விவசாய தோப்பிற்குள் கட்டிப்போட்டு வைத்திருந்த கன்று குட்டி ஒன்றை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளது. இந்நிலையில் நேற்று வனத்துறையினர் பசு கடித்த இடத்தில் கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தி உள்ளனர்.

News November 1, 2024

சதுரகிரி கோயில் அமாவாசை வழிபாடு

image

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு அக்.28முதல் நவ.2 வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிச்சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

News November 1, 2024

பொதிகை ரயிலை கவிழ்க்க சதி

image

செங்கோட்டை – சென்னை எழும்பூர் நோக்கி செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 6:30 மணி அளவில் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டது. இரவு 7:15 மணி அளவில் கடையநல்லூர் அருகே வந்த போது தண்டவாளத்தில் கல் இருந்தது தெரியவந்தது. கடையநல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே கல் இருந்ததால், லோகோ பைலட் ரயிலை நிறுத்தி கல்லை அப்புறப்படுத்தி விட்டு அதன்பின் ரயிலை ஓட்டிச் சென்றார்

News November 1, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து குழந்தைகள், முதியோர், மன வளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறையான சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும். சட்ட விரோதமாக செயல்படும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News November 1, 2024

சிவகாசி பட்டாசு நகர மக்கள் பற்றி சிந்தித்திருக்கிறீர்களா.?

image

சிவகாசி என்றாலே எல்லோருக்கும் தெரிந்தது பட்டாசு நகரம் என்று. நேற்று உலகம் முழுவதும் தீபாவளியை மக்கள் சிவகாசி பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். பட்டாசு வெடிக்கும்போது கிடைக்கும் உற்சாகம் வேறு எங்கும் காண முடியாது. ஆனால், பட்டாசு தயாரிப்பவர்களின் தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கும், அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கும் என ஒரு நாளாவது சிந்தித்திருக்கிறீர்களா.? சிந்தித்ததை கமெண்ட் பண்ணுங்க.!

error: Content is protected !!