India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 27) A.A.A இண்டர்நேஷனல் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 40 தனித்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக “Coffee With Collector” என்ற 88-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேகமலை புலிகள் காப்பகத்தில் செண்பகத்தோப்பில் பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் 1989 முதல் 480 சதுர கிலோ மீட்டரில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது. இதில் புலி, சிறுத்தை, கரடி உட்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. பொதுமக்கள் சாம்பல் நிற அணில்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக செண்பகத்தோப்பில் அருங்காட்சியகம் அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
விருதுநகரில் பிரசித்தி பெற்ற சதுரகிரி மலையில் ஆடி அமாவாசையையொட்டி மலைக்கு செல்ல அக.1 முதல் ஆக.14 வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுக் கூட்டம் நேற்று மதுரை, விருதுநகர் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மலை ஏற காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொடுட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆகஸ்ட் 7ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கி மாலை 6 மணிக்கு புஷ்ப யாகத்துடன் ஆடிப்பூரத் திருவிழா நிறைவடைவதாக அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மே.21 அன்று நடந்த கோயில் திருவிழாவில் ராமர் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் ராமசாமி, அவரது மகன் ராஜேந்திரன், ராம்குமார், இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் சத்திய ஷீலா தினமும் ஸ்ரீவி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமின் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக நீதிமன்றம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மாவட்டத்தில் 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், ராஜபாளையத்தில் சார்பு நீதிமன்றம், வத்ராப், காரியாபட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் இன்று திறக்கப்பட உள்ளன.
விருதுநகரில் இ.எஸ்.ஐ.சி யின் கவிதா சமகம் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் குறைதீர் கூட்டம் ஜூலை.29 இல் சிவகாசி இ.எஸ்.ஐ.சி கிளை அலுவலகத்தில் காலை.9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ.சி காப்பீட்டாளர்கள்,பயனாளர்கள்,வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்யலாம் என துணைமண்டல இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். SHARE IT
மத்திய அரசின் ரயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்வதில் தமிழக அரசு கால தாமதம் செய்வதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் கூறிய அமைச்சர் ராமச்சந்திரன் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளதாகவும், மதுரை – தூத்துக்குடி அகல ரயில்பாதை உள்ளிட்ட திட்டங்களுக்கு 907.33 ஹெக்டர் நில எடுப்பு பணி முடிந்து ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சிவகாசியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ.2.66 லட்சத்திற்கு வாங்கிய ஜீப்பில் பழைய என்ஜினை மாற்றி விற்பனை செய்ததாக கூறி மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி முத்துகிருஷ்ணனுக்கு ரூ.2.66 லட்சத்தை திரும்ப வழங்க வேண்டும்.மேலும் நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம், வழக்கு செலவிற்காக ரூ.10000 வழங்க நேற்று உத்தரவிட்டார்.
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசைக் கண்டித்து வரும் 27 ஆம் தேதி விருதுநகர் மாரியம்மன் கோயில் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.