Virudunagar

News August 22, 2024

சிவகாசியில் மாவட்ட அளவிலான தடகள போட்டி

image

அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் தடகள போட்டிகள் ஆக.29 அன்று நடைபெற உள்ளது. இதில் 200, 800, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 110 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், தொடர் ஓட்ட போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவிகள் தங்கள் பெயர்களை பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 22, 2024

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி அறிவிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்டம் சார்பாக 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்களில் 53 வகைகளில் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளோர் https://sdat.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.

News August 22, 2024

மின்வாரியத்திற்கு நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு

image

ராஜபாளையத்தை சேர்ந்த ராமசுப்பு நஷ்டத்தால் மூடப்பட்ட தனது நூற்பாலை மின் இணைப்பை துண்டித்து டெபாசிட் தொகை ரூ.1.50 லட்சத்தை திரும்பித் தரக்கோரி கடந்த ஆண்டு மின்வாரிய உதவி பொறியாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஸ்ரீவி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டை நாடினார். இதில் டெபாசிட் ரூ.1.50 லட்சத்தையும், இழப்பீடாக ரூ.25,000, வழக்கு செலவு ரூ.5000 மின் பகிர்மான கழகம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News August 22, 2024

மின்வாரியத்திற்கு நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு

image

ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமசுப்பு நஷ்டத்தால் மூடப்பட்ட தனது நூற்பாலை மின் இணைப்பை துண்டித்து டெபாசிட் தொகை ரூ.1.50 லட்சத்தை திரும்பித் தரக்கோரி கடந்த ஆண்டு மின்வாரிய உதவி பொறியாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டை நாடினார். இதில் டெபாசிட் ரூ.1.50 லட்சத்தையும், இழப்பீடாக ரூ. 25,000 வழக்கு செலவு ரூ.5 ஆயிரத்தை மின் பகிர்மான கழகம் வழங்க உத்தரவிட்டது.

News August 21, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிலம் தொடர்பான புகார் மனுக்கள் அதிக அளவில் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தீர்வு காணும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை நிலம் தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக ஆட்சியர் தகவல்

News August 21, 2024

விருதுநகர் மாவட்டத்தில் 141.90 மி.மீ மழை பதிவு

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 141.90 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக காரியாபட்டி பகுதியில் 17.20 மி.மீட்டர் மழையும், சாத்தூர் பகுதியில் 42 மி.மீட்டர் மழையும், கோவிலாங்குளம் பகுதியில் 25.50 மி.மீட்டர் மழையும், அருப்புக்கோட்டையில் 26 மி.மீட்டர் மழையும், விருதுநகரில் 7.60 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

News August 21, 2024

முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

விருதுநகர் மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை இடமாறுதல் செய்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வெம்பக்கோட்டை முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியில் உள்ள ஜோதி ராஜபாளையத்திற்கும், ராஜபாளையம் முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருக்கும் சதீஸ்குமார் வெம்பக்கோட்டைக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், ஷோபனாதேவி ஸ்ரீவில்லிபுத்தூருக்கும், வேல்பிரியா சாத்தூருக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News August 21, 2024

விருதுநகர் மாவட்டத்தில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

விருதுநகர் மாவட்டத்தில் வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதன்படி, வத்திராயிருப்பு தனி வட்டாட்சியராக பணியில் இருக்கும் ராமநாதனை சாத்தூர் வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், வத்திராயிருப்பு தனி வட்டாட்சியராக தனமும், ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியராக தங்கம்மாளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News August 21, 2024

புதிய மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நியமனம்

image

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக சீனிவாசன் என்பவரை நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தனி வட்டாட்சியராக பணியாற்றிய இவர் விரைவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக பதவியேற்க உள்ளார்.

News August 21, 2024

கண்மாய் தூர்வார தீவிரம் காட்டும் ஆர்வலர்கள்!

image

சிவகாசி பள்ளபட்டி கடம்பன்குளம் கண்மாயை தன்னார்வலர்கள் மூலமாக தூர்வாறிட விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகாசி பசுமை மன்றத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள தூர்வாரும் பணிகள் குறித்து இன்று சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் கண்மாய் பகுதியில் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார்.

error: Content is protected !!