India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று(1.8.24) நடைபெற்ற மாணவிகளுக்கு புத்தக உண்டியல் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைவர் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் திடீரென்று பள்ளியின் சத்துணவு சமையலறைக்கு சென்று அங்கு சமையல் செய்து வைத்திருந்த உணவுகளை சாப்பிட்டு பார்த்து அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். உடன் காரியாபட்டி வட்டாட்சியர் மாரீஸ்வரன் உட்பட பலர் இருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி ஆடி அமாவாசை வருவதை முன்னிட்டு ஆகஸ்ட் 1 முதல் 5 வரை, 5 நாட்கள் பக்தர்கள் மலையேறிச்சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஜூலை 31) மாணவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, தங்களது சேமிப்பில் இருந்து எதிர்வரும் புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவதற்காக மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் உண்டியல் வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று (ஜூலை 31) பதினாறு சக்கர சப்பரத்தில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் திருவீதி உலா நடைபெற்றது. திருவடிபூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்கு முன்னோட்டமாக இந்த 16 சக்கர சப்பரம் வீதி உலா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு இன்று மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை லேசான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை விருதுநகர் மாவட்டத்தில் 7991 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2022-23 ஆண்டில் 6 கர்ப்பிணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமானது முதல் லேசான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பழமையான ஊர்களில் ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கூறப்படுகிறது. மல்லி என்ற குறவ ராணியின் மகனான வில்லிக்கு பெருமாள் காட்சி தந்து அறிவுறுத்தியதன் பேரில், காட்டை திருத்தி கோயில் கட்டி அழகிய நகரை உருவாகினான் என்பது புராணம். இதனாலேயே ‘வில்லிபுத்தூர்’ என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. உங்கள் விருதுநகர் நண்பர்களுக்கு இது தெரியுமா?
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று (ஜூலை 29) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.6000 வீதம் மொத்தம் ரூ.18,000 மதிப்புள்ள தையல் இயந்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (ஜூலை 29) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் சூரிய சக்தியால் தனித்து இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் விருப்பமுள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.