Virudunagar

News August 2, 2024

விருதுநகர் அருகே விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

image

சாத்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சாத்தூர் – கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில், இன்று(ஆக.,2) இருகன்குடி கோயிலுக்கு பாதையாத்திரை சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பக்தர்கள் முருகன், மகேஷ், பவுன் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 1, 2024

சிவகாசியில் 103 பேர் கைது

image

சிவகாசியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசின் பட்ஜெட் அறிவிப்பில் தமிழகம் இடம்பெறாததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 38 பெண்கள் உள்ளிட்ட 103 பேரை போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

News August 1, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் வீடு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். தகுதியுடைய நபர்கள் வரும் ஆக.9க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

விருதுநகரில் 4 அரசு அதிகாரிகள் கைது

image

விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் லஞ்சம் வாங்கியதாக 4 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ரூ.25,000 லஞ்சம் வாங்கிய டி.கடமன்குளம் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ், ரூ.14,800 வாங்கிய சேத்தூர் சார்பதிவாளர் கார்த்திகேயன், ரூ.15,000 வாங்கிய துலுக்கப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் நாகராஜன், ரூ.10,000 வாங்கிய வெம்பக்கோட்டை மின் உதவி செயற்பொறியாளர் சேதுராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News August 1, 2024

வங்கிக்கு ரூ.25,00 அபராதம் விதித்த நீதிமன்றம்

image

சிவகாசி அருகே தேவர்குளத்தை சேர்ந்தவர் ஜனனி. இவர் குடும்ப பிரச்சனை தொடர்பாக சிவகாசி ஜுடிசியல் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். இதில் சென்னை ஸ்டாண்டர்டு சேர்ட்டர்டு வங்கியில் ஜனனியின் கணக்கு விவரம், பரிவர்த்தனையை அவரது கணவர் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் அவரது விவரங்களை வழங்கியதற்காக வங்கிக்கு ரூ.25.000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News August 1, 2024

சாதனை படைத்த விருதுநகர் மருத்துவர்கள்

image

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஓர் ஆண்டில் மகப்பேறு இறப்பே இல்லாத மாவட்டம் என்ற பெருமையை விருதுநகர் மருத்துவர்கள் பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை வட்டத்தில் கடந்த ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான ஓராண்டு காலத்தில் 7,991 பிரசவங்கள் நடந்துள்ளன. இதில் ஒரு மகப்பேறு இறப்பும் நிகழவில்லை. இதன்மூலம் மகப்பேறு இறப்பே இல்லாத மாவட்டம் என்ற பெருமையை விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது.

News August 1, 2024

சதுரகிரி கோயிலுக்கு 5 நாட்கள் அனுமதி

image

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று(ஆக.,1) முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி. இரவில் கோயிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News August 1, 2024

சிவகாசி அருகே ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு

image

சிவகாசி அருகே பள்ளப்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார்(32). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் நேற்று(ஜூலை 31) திருத்தங்கல் உறிஞ்சுகுளம் கண்மாய் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு நடத்திய விசாரணையில், தாண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

News August 1, 2024

விரைந்து செயல்பட கலெக்டர் அறிவுறுத்தல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(ஜூலை 1) முன்னோடி வங்கி சார்பாக வங்கி அலுவலர்கள், கல்லூரி பொறுப்பு பேராசிரியர்கள் & கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வகுப்பினை ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, நிலுவையில் உள்ள கல்வி கடன் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்து தகுதியான நபர்களுக்கு கல்வி கடன் வழங்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.

News August 1, 2024

வாகன போக்குவரத்து வழித்தடம் அறிவிப்பு

image

வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 1 முதல் 5ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர். இதனையடுத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் சென்று வர வத்திராயிருப்பு காவல் நிலையம் சார்பில் போக்குவரத்து வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!