India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டம் அருகே கல்லூரணியில் சாயல்குடி சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் சிக்கியது. இதில் காரில் பயணம் செய்த கீழ முடி மன்னார்கோட்டையை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பாலமுருகன்(43) மற்றும் அவருடன் காரில் சென்ற மணி(18), ஆலடிபட்டியை சேர்ந்த சின்னத்துரை(22) உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சதுரகிரி ஆடி அமாவாசை விழாவுக்கான பாதுகாப்பு பணியில் 1420 போலீசார் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 ஏடிஎஸ் பிக்கள், 11 டிஎஸ்பிக்கள், 25 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1420 போலீசார் 24 மணி நேரமும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்டு வரும் வெடி விபத்துக்களை தடுக்க தொழிலக பாதுகாப்புத்துறை சார்பில் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போர்மேன்களுக்கு பயிற்சி வகுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத 98 பட்டாசு ஆலைகளின் போர் மேன்களுக்கு தல ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராத தொகையை செலுத்தி பயிற்சி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று (02.08.24) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பாக திறன் வாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு வரும் ஆக.9 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டங்களில் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 01.08.2024 முதல் 16.08.2024 வரை நடைபெறுகிறது. இதில் தகுதியுடையோர் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.
காரியாபட்டி பி. புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி தலைமை வகித்து பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2024-25 காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்படலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் ஆக.9 ஆம் தேதிக்குள் உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயனடையுமாறு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை கண்காணிக்கவும்,மழை நேரங்களில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (அக.2) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 1/6/2024 முதல் 30/6/2024 வரை 22 குழந்தைகள் திருமணங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 வயது நிரம்பாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பான 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் நடந்தால் 1098 க்கு தகவல் தெரிவிக்கலாம்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 – 5 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.,2) திருப்பூர் மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர் பணிபுரிந்த பாலசுப்பிரமணி என்பவர் சதுரகிரி கோயிலுக்கு நடந்து செல்லும்போது பசுகிடை என்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.