India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரியாழ்வார் ஒருநாள் தோட்டத்தில் குழந்தை ஒன்றை கண்டெடுத்துள்ளார். அக்குழந்தைக்கு கோதை என பெயர் வைத்து வளர்த்து வந்தார். கோதை சிறு வயதிலிருந்தே கண்ணன் மீது கொண்ட அளவற்ற அன்பால் பெரியாழ்வார் தொடுத்து வைத்திருக்கும் மாலையை அவருக்குத் தெரியாமல் கோதை அணிந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனாலேயே ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்றும், இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நேற்று(ஆக.4) 50,000 மேற்பட்ட பக்தர்கள் மலையேறிச் சென்றனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகமான காரணத்தால் அங்கங்கே பக்தர்கள் நிறுத்தப்பட்டனர். 10,000 பக்தர்கள் அடிவாரத்தை நோக்கி இறங்கி வருவதால், கூட்டத்தை தவிர்ப்பதற்காக சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் 1 மணி வரை விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு சீட் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் போட்டி தேர்வுக்கு பயிற்சி அளித்தல், சிறப்பு காப்பீட்டுத் திட்டம் அளித்தல், வாழ்வாதாரங்களை எளிதாக்குதல், வீடு கட்ட நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அர்வமுள்ளவர்கள் www.dwbdnc.dosje.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் – 1 மாணவர்களுக்கு முதல் அமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 என இளநிலை பட்டப்படிப்பு வரை வழக்கப்படும். இதற்காக நேற்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் முதல் தாளில் 2034 மாணவர்களும், இரண்டாம் தாளில் 2028 மாணவர்களும் தேர்வு எழுதினர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர் மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக சார்பில் நவீன சமையலகம் அமைக்க ரூபாய் 3 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. விருப்பம் உடையோர் 10 நபர் குழுக்களாக அமைத்து விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று(ஆக.04) மாலை 5.30 மணி வரை 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் யரும் இல்லை. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆறு, கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது, காதல் என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் நாம் செய்த சேட்டைகள் பல உண்டு. அந்த வகையில் உங்க நண்பன் பெயர்,அவருடன் நீங்கள் செய்த சேட்டையை கீழே கமெண்ட் பண்ணி, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி என 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இதில் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 22 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. இதில் கடந்த ஏப்.2023 முதல் மார்ச்.2024 வரை மொத்தம் 7,991 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அனைத்து தாய் மற்றும் சேய் நலம் காக்கப்பட்டுள்ளது. 2022 – 23 அறிக்கைப்படி 8,483 குழந்தைகள் பிறந்ததில் 6 தாய்கள் உயிரிழந்துள்ளனர்.
சிவகாசியில் உள்ள அச்சகங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று அடுத்த ஆண்டுக்கான தமிழ், தெலுங்கு காலண்டர்கள் வெளியிடப்படும். அந்த வகையில் நேற்று 2025 ஆம் ஆண்டிற்கான புதிய காலண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் கடிகாரம் பொருத்திய காலண்டர், 234 சட்டமன்ற தொகுதி குறித்த விவரங்கள் அடங்கிய புதிய காலாண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு விலை 10% உயர்த்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.