Virudunagar

News August 6, 2024

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜாதி டிசர்ட்க்கு தடை

image

தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை தேர் திருவிழா நடைபெற உள்ளது. இது குறித்து ஸ்ரீவியை சேர்ந்த சந்தனக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் திருவிழாவில் ஜாதியை வெளிப்படுத்தும் விதமாக டிசர்ட், ரிப்பன் உள்ளிட்டவை அணிந்து வரை தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

News August 6, 2024

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதா மணி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31 க்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என தகவல் தெரிவித்துள்ளார். இ-சலான் மூலம் ரூ.200 செலுத்தி பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 6, 2024

வினாடி வினா போட்டி – ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது. ஆக.18 அன்று விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் வினாடி வினா போட்டிகள் நடைபெற உள்ளது. எனவே போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளோர் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

ஆண்டாள் கோவிலில் நாளை தேரோட்டம்

image

தமிழக அரசின் சின்னமாக விளங்கும் ஸ்ரீவி ஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேரோட்டம் நடைபெறும். இந்நிலையில் நாளை(ஆக.7) காலை.9.05 க்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்தாண்டு தேரோட்டத்தின் போது தேரின் வேகத்தை குறைத்து ஆங்காங்கே நிறுத்தி செல்ல பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. தேரில் புதிதாக 7 வடங்கள் இணைக்கப்பட்டு அதில் பெண்களுக்கு ஒரு வடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

News August 6, 2024

காலை உணவுத் திட்ட விரிவாக்கம் – ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மேலும் 255 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. எனவே பள்ளி குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் பழங்கள், சிறுதானியங்கள், காய்கறிகளை வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்புகொண்டு நன்கொடை வழங்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று (ஆக.5) தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

காலை உணவுத் திட்ட விரிவாக்கம் – ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மேலும் 255 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. எனவே பள்ளி குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் பழங்கள், சிறுதானியங்கள், காய்கறிகளை வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்புகொண்டு நன்கொடை வழங்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று (ஆக.05) தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

மாணவர்களின் கல்விக்கு உதவிய ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024–25ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி சேர்க்கை பெற்று முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் செலுத்துவதற்கு உதவிகள் தேவைப்பட்ட 7 மாணவ மாணவிகளுக்கு விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளை மூலம் ரூபாய் 75 ஆயிரத்து 800 மதிப்பில் கல்வி கட்டணத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் நேற்று (ஆக.05) வழங்கினார்.

News August 5, 2024

வினாடி வினா போட்டி – ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் வினாடி வினா போட்டிகள் நடைபெற உள்ளது. எனவே போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளோர் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டங்களில் இன்று மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு தலா ரூ.6000 விதம் மொத்தம் ரூ.54 ஆயிரம் மதிப்புள்ள தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார்.

News August 5, 2024

விருதுநகர் மாவட்ட மக்களுக்கு ஜில் நியூஸ்

image

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு இன்று (ஆக.05) இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 10 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!