India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நாடக சாலை தெருவில் உள்ள ஸ்ரீதிருவேங்கடமுடையான் திருக்கோவிலில் உற்சவ விழா ஆக.30 ஆம் தேதி தொடங்கி செப்.2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 4ஆம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விருதுநகர் அருகே மேல வளையப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் அழகுமுருகன் (25). இவர் நேற்று இரவு கோட்டூர் பாலவனத்தம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் அழகு முருகன் மற்றும் மாரீஸ்வரன்(29) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பின்னால் அமர்ந்திருந்த சிவா என்பவர் காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் திமுக அரசின் அலட்சியத்தால் தமிழகத்தில் இன்று பல ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்காத அவல நிலை உள்ளது. சென்னையில் கார் பந்தயம் நடத்துவதற்கு என்றே இடங்கள் உள்ள நிலையில் மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் கார் ரேஸ் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் ஏன்?. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மதுரை செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே மழை நீர் வடிகால் செல்ல சிறிய பாலம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசு நெடுஞ்சாலை துறையினர் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டி வருகின்றனர். பாலம் கட்டுமான பணிகளை நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் திருமால் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிவகாசி அருகே வெற்றிலையூரணி ஆனைக்கூட்டம் பகுதியில் நீர் ஆதாரம் உள்ளது.இதனால் இப்பகுதியில் அதிகமான மான்கள் உணவிற்காக வசிகின்றன. இவைகள் அவ்வபோது உணவைத் தேடி வெளியில் வரும்போது சாலையில் வாகனங்களால் அடிபட நேரிடுகின்றது அடிக்கடி இது போன்ற சம்பவம் நிகழ்வதால் மான்களின் எண்ணிக்கை குறைகிறது.எனவே இப்பகுதிகளில் மான்கள் சரணாலயம்
அமைக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நாடக சாலை தெருவில் உள்ள ஸ்ரீதிருவேங்கடமுடையான் திருக்கோவிலில் உற்சவ விழா ஆக.30 ஆம் தேதி தொடங்கி செப்.2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 3 ஆம் நாளான நேற்று தோரண கும்பமண்டல திருவாராதனம், பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, சமேத திருவேங்கடமுடையான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
விருதுநகர் அருகே கட்டிட வேலை செய்து வருபவரின் மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். மகளின் மீது இச்சை கொண்ட தந்தை மனைவி இல்லாதபோது மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து அச்சிறுமி பள்ளி ஆசிரியரிடம் தெரிவிக்க அவர் 1098 க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். சிறுமி அளித்த வாக்கு மூலத்தின் பேரில் சிறுமியின் தந்தையை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே ஆமத்தூர் பகுதியில் ஆமத்தூர் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது கருப்பசாமி மற்றும் கூடலிங்கம் ஆகிய இருவர் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக பட்டாசு திரிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த பட்டாசு திரிகளை பறிமுதல் செய்தனர்.
ஏழாயிரம்பண்ணை, அன்பின்நகரம் , தாயில்பட்டி, துரைச்சாமிபுரம், விஜயகரிசல்குளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு மற்றும் கருந்திரி தயாரிக்கப்படுகிறதா என இன்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 4 இடங்களில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த ஏசுதாஸ், மைக்கேல் ராஜ், பாண்டியன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 60 கிலோ பட்டாசுகள், 30 குரோஸ் கருந்திரிகள் பறிமுதல் செய்தனர்.
அருப்புக்கோட்டையில் நாகலிங்கா நகர் பகுதியில் அரசு கிளை நூலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த அரசு கிளை நூலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாசகர்கள் மற்றும் நூலகரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடி நூலகத்திற்கு சுகாதார வளாகம் போன்ற தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருவதாக உறுயளித்தார்.
Sorry, no posts matched your criteria.