India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்ட காவல் காண்காணிப்பாளராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆக.13 அன்று தென்காசி-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன. எனவே செங்கோட்டை- மதுரை ரயில் தென்காசியிலிருந்து புறப்படும் எனவும், மதுரை-செங்கோட்டை ரயில் தென்காசி வரை மட்டுமே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வயநாட்டில் ஜீலை.30 அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் 7 நாட்களுக்கு மேலாக மீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் ராஜபாளையம் அருகே உள்ள சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சேமித்த ரூ.13,300 கேரளா முதலமைச்சரின் நிவரண நிதியாக அளித்திருப்பது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. SHARE IT
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.7) விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்புர தேர் திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு வெவ்வேறு மண்டபங்களில் எழுந்தருளி ஆண்டாள், ரெங்கமன்னர் காட்சியளித்தனர். இதனையடுத்து தேரோட்டத் திருவிழா இன்று காலை 9.05 மணிக்கு தொடங்கி ரத வீதிகள் வழியாக வந்து மீண்டும் 12:24 மணிக்கு நிலையம் வந்தடைந்தது.
அமைச்சர்கள் KKSSR ராமச்சந்திரன் & தங்கம் தென்னரசு மீதான வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க ஸ்ரீவி., சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அமைச்சர்களை வழக்கில் இருந்து விடுவித்தது தவறானது எனவும் ஸ்ரீவி., நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் கண்டனங்களை தெரிவித்துள்ளார். வரும் 11ம் தேதி அமைச்சர்கள் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர்கள் KKSSR ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் நீதிபதி வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 2022ம் ஆண்டு KKSSR & தங்கம் தென்னரசை விடுவித்து ஸ்ரீவி., நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று(ஆக.,7) நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் வாகனங்கள் ஸ்ரீவி., சர்ச் சந்திப்பு வழியாகவும், ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் எம்.பி.கே புதுப்பட்டி வழியாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலின் ஆடிப்பூர தேரோட்டம் இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் நாளை காலை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அமைச்சர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதங்கள் முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நாளை தீர்ப்பு வரவுள்ளது. அரசியல் வட்டாரங்கள் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.