India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நேற்று முன்தினம் பெருமாள்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளிக்குமார் என்பவரை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவத்தில் 4 பேரை கைது செய்த நிலையில் காளீஸ்வரனை விசாரணைக்காகவும், ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த இடங்களுக்கு அழைத்துச் சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்ததில் அருகில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து கை உடைந்து முறிவு ஏற்பட்டதாக தகவல்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகரில் வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 7 வரை மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கரிசல் மண்ணின் பண்பாட்டை மையமாகக் கொண்டு வண்ண சிறுகதைகள் எழுத்தார்வமிக்கவர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மம்சாபுரம் ஒற்றன்குளம் கண்மாய் பகுதியில் இருந்த 5 பேரை சோதனை செய்த போது அவர்களிடம் காட்டுப்பன்றி இறைச்சி இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஸ்ரீவி வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து மம்சாபுரத்தை சேர்ந்த சுந்தர், பால்ராஜ், ஆனந்தகுமார் உள்ளிட்ட ஐந்து பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகரில் வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 7 வரை மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கரிசல் மண்ணின் பண்பாட்டை மையமாகக் கொண்டு வண்ண சிறுகதைகள் எழுத்தார்வமிக்கவர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது பெண் டிஎஸ்பி காயத்திரி மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.பெண் டிஎஸ்பி தலைமுடியை பிடித்து தாக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினருக்கே இங்கு பாதுகாப்பு இல்லாதா சூழல் உள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டையில் டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி இன்று சிலர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி உள்ளிட்ட போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது பெண் டிஎஸ்பி தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதலில் ஈடுப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் விருதுநகரைச் சேர்ந்த ஆதி ஸ்ரீவிவேகா கடந்த செமஸ்டரில் தோல்வியடைந்த பிசியாலஜி பாடத்தை மீண்டும் எழுதிய நிலையில், அதிலும் தோல்வி அடைந்ததால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் மற்றும் மருத்துவர் கல்லூரி நிர்வாகம் தரப்பில் விசாரணை.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை அளவு குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் (செப்.,3) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்யுதா? COMMENT பண்ணுங்க.
விருதுநகர் மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய 11 தாசில்தார்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார். குறிப்பாக பறக்கும் படை தனி தாசில்தாராக பணியாற்றிய ராஜ்குமார் விருதுநகர் தாசில்தார் ஆகவும், நிலை எடுப்பு பிரிவு தனி தாசில்தார் பாலமுருகன் ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தாராகவும், திருச்சுழி தாசில்தாராக பாண்டியராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி தாசில்தார் வடிவேல் விடுமுறையில் செல்வதால் அவருக்கு பதில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு முன்னாள் நேர்முக உதவியாளர் லட்சம் பொறுப்பு தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். பறக்கும்படை தனி தாசில்தார் ராஜ்குமார், விருதுநகர் தாசில்தாராகவும், நில எடுப்பு மற்றும் மேலாண்மை அலகு (சிவகாசி) தனி தாசில்தார் சந்திரசேகரன், சிவகாசி சப்-கலெக்டர் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.