India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இருக்கன்குடியில் மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி மாரியம்மனை தரிசனம் செய்தனர். ஒரு வாரம் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அம்மன் வீதி உலா ஆக.16 நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
2024 – 2025 ஆம் கல்வியாண்டு நாள்காட்டியில் ஆகஸ்ட் மாதத்தின் 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமை பள்ளி வேளை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 பள்ளி வேளை நாட்களையும் பள்ளி கல்வித்துறை ரத்து செய்து அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டங்கில் இன்று ராஜபாளையம் ஸ்ரீ ரமணா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கக்கூடிய 42 பள்ளி மாணவர்களுடனான காபி வித் கலெக்டர் என்ற 93வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட்- 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆக.16 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். SHARE IT
மதுரை கோட்டத்தில் பகல் வேலைகளில் பொறியியல் பிரிவு சார்பில் தூண்கள் நிறுவும் பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குருவாயூரிலிருந்து நெல்லை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ்(16128) நாளை(ஆக.,10 ஆம் தேதி) விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. SHARE IT.
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சங்கரபாண்டியாபுரத்திற்கு ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து எண்ணற்ற பறவைகள் வருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும், கடந்த மார்ச் மாதம் வந்த ஏராளமான செங்கால் நாரை பறவைகள், மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்தன. தற்போது குஞ்சுகள் பறக்க தொடங்கியதால் மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளன.
ஏழாயிரம்பண்ணை அருகே சங்கர பாண்டியாபுரத்திற்கு ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து எண்ணற்ற பறவைகள் வருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் ஏராளமான செங்கால் நாரை பறவைகள் இங்கு வந்து இங்குள்ள மரங்களில் கூடுகட்டி தங்கி இனப்பெருக்கம் செய்தது. தற்போது பறவைகளின் குஞ்சுகள் பறக்க தொடங்கியதால் தங்களது வெளிநாடுகளுக்கு பறவைகள் செல்கின்றன.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், அரசின் மூலம் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் வரும் 14ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (ஆக.08) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விருதுநகர் மாவட்டம்
‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் HCL-நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்விதேர்வு முகாம் ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வரும் நிலையில், இன்றும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.