Virudunagar

News August 12, 2024

விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பொறுப்பேற்பு

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஆக.12) புதிய காவல் கண்காணிப்பாளராக கண்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் விருதுநகர் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும் எனவும் குற்றங்கள் குறைக்கப்படும் எனவும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களின் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

News August 12, 2024

நரிக்குடியில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா

image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள கொட்டகாட்சியேந்தல் கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயிலில், ஆடி மாத உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட கிடாக்களை பலியிட்டனர். தொடர்ந்து, நேற்று(ஆக.,11) காலை 6 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு சுடச்சுட கறி விருந்து பரிமாறப்பட்டது. இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். பெண்களுக்கு அனுமதி இல்லை.

News August 12, 2024

காவல்துறைக்கு சிவகாசி MLA வேண்டுகோள்

image

சிவகாசி சாட்சியாபுரம் மேம்பாலப்பணிகள் தொடங்க உள்ள நிலையில், கனரக வாகனங்கள், பேருந்துகளுக்கான மாற்றுப்பாதை வழித்தடங்களில் முறையாக இயக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று(ஆக.,11) மாலை MLA அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிவகாசி DSP கலந்து கொண்ட நிலையில், மாற்றுப் பாதையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேவையான காவல்துறையினரை நியமிக்க MLA கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 11, 2024

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வரும் ஆகஸ்ட் 13 அன்று காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆர்.டி.ஓ-க்கள் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் இதில் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News August 11, 2024

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விருதுநகர் மாவட்டம் சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம். இந்த போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இளையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT

News August 11, 2024

சிவகாசியில் தேசிய கொடி தயாரிப்பு தீவிரம்

image

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிவகாசியில் தேசிய கொடி தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிறிய வடிவிலான பேஜ் முதல் மெகா சைஸ் வடிவிலான பல்வேறு காகிதம் மற்றும் அட்டைகளில் தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இங்கிருந்து தமிழக மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும் நிலையில் இந்தாண்டு 5% விலை உயர்ந்துள்ளது.

News August 11, 2024

சிவகாசியில் 19 வயது இளைஞர் திடீர் தற்கொலை

image

சிவகாசி பள்ளப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் மாதவன்(19). இவர் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த நிலையில், மாதவனை பெற்றோர் வேலைக்கு செல்லும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாதவன், நேற்று(ஆக.,10) நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 10, 2024

மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் விருது அறிவிப்பு

image

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வீட்டுமனை பட்டா வழங்குதல், மானியக் கடன், ஆவின் திட்டம் உள்ளிட்ட, மாற்றுத்திறனாளிகள் நலனில் தனி அக்கறை செலுத்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆக.15 அன்று சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் விருதை வழங்குகிறார். SHARE IT

News August 10, 2024

BREAKING: விருதுநகர் மாவட்டத்திற்கு கனமழை

image

தமிழ்நாட்டில் நாளை மறுநாள்(ஆக.12) விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் கடந்த சில தினங்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2024

வினாடி வினா போட்டிக்கு அழைப்பு

image

போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கான மாநில அளவிலான வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. ‘சங்க இலக்கியமும் திருக்குறளும்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் https://forms.gle/CN4ey1H6Lqsdyex18 என்ற இணையத்தில் வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!