India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று(ஆக.,12) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் மட்டும் கடன் பெறுமாறும், அதிக வட்டி வசூலிக்கும் & கடன் செயலிகள் மூலம் கடன்களைப் பெற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் இது போன்ற செயலிகளில் கடன் பெறாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் மட்டும் கடன் பெறுமாறும் அதிக வட்டி வசூலிக்கும் மற்றும் கடன் செயலிகள் மூலம் கடன்களைப் பெற வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் இது போன்ற செயலிகளில் கடன் பெறாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு ஆட்சியர் ஜெயசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆக.13) சிவகாசி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 4 அரசு உதவி பெறும் பள்ளியை சார்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான “காபி வித் கலெக்டர்” 95வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு கல்லூரி, தேர்வு, உயர் கல்வி, வேலை வாய்ப்பு குறித்து எடுத்துரைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான உரிமை ஸ்தலங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜபாளையம் அய்யனார் கோயில் சாலையில் உள்ள முடங்கையாறுப் பாலத்தின் பக்கவாட்டு சுவரின் மீது இன்று காலை ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் துண்டிக்கப்பட்ட தலையை மட்டும் மீட்டு விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த பூவையா என்பது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை மீட்க சுந்தரராஜபுரம் சென்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் கள்ளத்தனமாக பட்டாசு தயாரிப்பவர்களை கண்டறிய தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வெடி விபத்துகள் ஏற்படா வண்ணம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும், சமூகத்தில் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சிவகாசியில் இந்தியன் ஆயில் பெட்ரோலியம் சார்பில் இன்று (ஆக.13) நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சரும் நடிகருமான சுரேஷ்கோபி வருகை தர உள்ளார். சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுரேஷ் கோபி சிறப்புரையாற்ற உள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஆக.12) நபார்டு வங்கி நிதி உதவியுடன் விருதுநகர் மாவட்ட மானாவாரி நிலங்கள், தரிசு நிலங்கள் மேம்படுத்துதல் மற்றும் சிறுதானிய சாகுபடி திட்ட மூலம் விவசாயிகளுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆக.12) சிவகாசி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 2 அரசு உதவி பெறும் பள்ளியைச் சார்ந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான காபி வித் கலெக்டர் என்ற 94வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து உரையாடினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆக.12) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பார்வதி என்பவர் தனக்கு பெண் குழந்தைகள் உள்ளதாகவும், குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்யுமாறு மனு அளித்திருந்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து கல்லூரி பயிலும் 2 மாணவிகளுக்கு மொத்தம் 6000 ரூபாய்க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.