India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3 ம் கட்ட
அகழாய்வில் முழுமையான செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை சிதைந்த நிலையில் கட்டுமானம் கண்டறியப்பட்டு வந்த நிலையில் தற்போது முழுமையான கட்டுமான சுவர் கண்டறியப்பட்டுள்ளது.
முன்னோர்கள் தொழிற்கூடம் அமைத்து வசித்ததற்கான அடையாளமாக இந்த செங்கல் சுவர் அமைந்துள்ளதாக தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் சட்ட விரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் 24 மணி நேரமும் தனக்கு வாட்ஸ் அப்பில் நேரிடையாக தகவல் அளிக்கலாம் என மாவட்ட எஸ்பி கண்ணன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். போதை பொருட்கள் விற்பனை மற்றும் சட்ட விரோத செயல்கள் குறித்து 24 மணி நேரமும் பொதுமக்கள் (99402 77199) இந்த வாட்சப் எண்ணில் தகவல் அளிக்கலாம். தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வேட்பு மனுவில்
உண்மை தகவல்களை மறைத்ததாக தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மாணிக்கம் தாகூர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்குகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறை பின்பற்றப்படவில்லை எனக்கூறி நான்கு வார காலத்திற்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பெண் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்ட வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முருகேசன் என்பவர் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் இன்று தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான முருகேசனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரிடமிருந்து முருகேசன் தப்பி ஓட முயன்ற போது அவருக்கு கை முறிவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழக வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச,தேசிய போட்டிகளில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் செப்.30 க்குள் www.sdat.tn.gov.in என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே பெரிய வள்ளிகுளம் பகுதியில் அனுமதியின்றி வீடுகளில் போலியான ஸ்டிக்கர் ஒட்டிய வெளிமாநில மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் 10 நாட்கள் முகாமிட்டு கண்காணித்து வந்தனர். இதில், முன்னாள் ராணுவ வீரரான வீரராஜ்(56) வீட்டில் இருந்த 264 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே பெரிய வள்ளிகுளம் பகுதியில் அனுமதியின்றி வீட்டில் மதுபான பாட்டில்கள் வைக்கபட்டிருந்த கிடைத்த தகவலின் பேரில் மதுவிலக்கு டி.எஸ்.பி.சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் ராணுவ வீரரான வீரராஜை (56) சாத்தூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்து 250 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
“தமிழ் நாகரிகத்தின் தொட்டியான கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் சிறப்புற செயல்பட்ட தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்திய தொல்லியல் துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் தொல்லியல் துறையில் பல சாதனைகளை புரிந்திட மனமார்ந்த வாழ்த்துகள்” என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தனது ஆரம்ப கால கல்வியை துவக்கிய, தமக்கு பிடித்த, தனது கல்வி மேம்பாட்டிற்கு துணையாக இருந்த ஆசிரியையை பாராட்டி அவருடன் எடுத்த புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “சிறந்த ஆசிரியர் என்று கேள்விக்கு நிறைய பதில் இருக்கலாம் ஆனால் ‘கற்கும் விருப்பத்தை தோற்றுவிப்பவரே’ சிறந்த ஆசிரியர் என்பேன் நான். எங்கள் ஜூலியா மிஸ் சிறந்த ஆசிரியர்!” என பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.