Virudunagar

News August 18, 2024

விருதுநகர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்நிலையில், தூத்துக்குடி, ராம்நாடு, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *உங்கள் பகுதி நண்பர்களுக்கு பகிருங்கள்*

News August 18, 2024

சனி பிரதோஷத்தில் நந்திக்கு சிறப்பு பூஜைகள்

image

அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. இந்த சிறப்பு பிரதோஷ பூஜையை காண மக்கள் கூட்டம் கூட்டமாக கோவிலில் குவிந்தனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேகப் பால் பிரசாதமாக வழங்கப்பட்டது.

News August 17, 2024

விருதுநகர் மாவட்டத்தில் மழை

image

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,விருதுநகர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 17, 2024

புத்தகத் திருவிழாவில் வினாடி வினா போட்டிகள்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா போட்டிகள் நாளை மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையாளராக இதில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News August 17, 2024

சிவகாசி அருகே முதியவர் வெட்டி கொலை

image

சிவகாசி அருகே எரிச்சநத்தம் -அழகாபுரி சாலையில் உள்ள தனியார் மினரல் வாட்டர் நிறுவன இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருபவர் குமிழங்குளத்தை சேர்ந்த சௌந்தரராஜன்(84). இன்று அதிகாலை மர்ம நபர்கள் இவரை வெட்டி கொலை செய்து அவர் அணிந்திருந்த நாலரை பவுன் தங்கச் செயின், மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். இக்கொடூர சம்பவம் குறித்து, எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

News August 17, 2024

விருதுநகரில் அதிகரித்து வரும் காலிப்பணியிடங்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் மொத்த அரசு பேருந்துகளின் எண்ணிக்கை 449 ஆகும். இதன்படி, 1040 டிரைவர்கள் மற்றும் 960 நடத்துநர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் பணி நிறைவு, வயது முதிர்வு காரணமாக விருப்ப ஓய்வு பெறுவதால், காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. இதன்படி, மாவட்டத்தில், 150 டிரைவர்கள், 200 நடத்துநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனை, நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News August 16, 2024

ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை, விருதுநகரில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து முறையாக கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கோரி வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ் தாக்கல் செய்த மனுவில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2024

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “உணவகங்களில் எண்ணெய் வகைகளை மீண்டும் உபயோகிக்க கூடாது; உணவகங்களில் பணி புரியும் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்; உணவகங்களில் பூச்சிகள் ஈக்கள் புகாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; விதிமுறைகளை பின்பற்றாத உணவக வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2024

“நடமாடும் வாகனங்களில் கன்று வாங்க வேண்டாம்”

image

விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா இன்று, “பழமர சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் பழமரகன்று, தென்னங்கன்றுகள் வாங்குவதற்கு நர்சரிகளுக்கு செல்லும்போது பழ மரக்கன்றுகளின் உண்மை தன்மையை அறிந்து வாங்க வேண்டும்; நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனைக்கு வரும் கன்றுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும்; மேலும், விற்பனை ரசீதை நர்சரி உரிமையாளரிடம் கேட்டு பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

விருதுநகரில் விதிமுறை மீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என தொழிலாளர் நலத்துறை சார்பில் நேற்று (ஆக.15) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 131 நிறுவனங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டது. இந்நிறுவனங்கள் மீது தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

error: Content is protected !!