Virudunagar

News September 25, 2025

சிவகாசியில் 24 மணி நேரம் கெடு விதிப்பு

image

சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் பன்றிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி சிலர் பன்றி வளர்ப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் பன்றி வளர்ப்பவர்களின் விவரங்களை கண்டறிந்த மாநகராட்சி நிர்வாகம் அவர்களிடம் 24 மணி நேரத்திற்குள் பன்றிகளை அப்புறப்படுத்தவும், அப்புறப்படுத்தவில்லை என்றால் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நோட்டீஸ் வழங்கியுள்ளது.

News September 25, 2025

விருதுநகர்: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை

image

விருதுநகர் மக்களே மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 – 36 வயதுக்குட்பட்டவர்கள், <>இங்கே கிளிக் செய்து<<>> அக்.13 க்குள் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 25, 2025

திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டி

image

தமிழ்வளர்ச்சித்துறை சார்பாக 31.10.2025 அன்று நடைபெறும் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறமைகொண்ட தகுதியான மாணவர்கள் திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

News September 24, 2025

சாத்தூரில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின்

image

சாத்தூரில் நேற்று திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் தென்மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என நிர்வாகி ஒருவர் கோரிக்கை வைத்தார். மு.க.ஸ்டாலின் அனுமதித்தால் நான் இதே சாத்தூர் தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கிறேன் என்றார்.

News September 24, 2025

விருதுநகர்: 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு!

image

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்த லலிதா (62), 3 நாட்களுக்கு முன்பு ரயில்வே ஸ்டேஷன் அருகில் வாக்கிங் சென்றார். அப்போது ஒரு நபர் அவரிடம் இருந்த 10 பவுன் தாலி செயினை பறித்து ஓடிவிட்டார். இதில் CCTV கேமிராக்களை ஆய்வு செய்த போலீசார், இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட செம்பட்டியை சேர்ந்த அடைக்கலம் (32) என்பவரை கைது செய்து 10 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.

News September 24, 2025

விருதுநகர்: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா.?

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் முறையாக தரப்படவில்லை என புகார் இருக்கிறதா? இனிமேல் நீங்க செல்லும் போது இது நடந்தால்?? தயங்கமால் விருதுநகர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04562- 252388 அழைத்து தெரியப்படுத்துங்க. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களு\ம் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க. மறக்காம நீங்க SAVE பண்ணுங்க..

News September 24, 2025

விருதுநகர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

விருதுநகர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ்அப்-கே வந்துடும். இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News September 24, 2025

விருதுநகர்: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.71,900 சம்பளம்!

image

விருதுநகர்: ஊரக வளர்ச்சி துறையில் உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10th படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் செப். 30க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.15,700 – ரூ.71,900 வரை. சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, வத்ராப், விருதுநகர், வெம்பக்கோட்டை, சிவகாசி, காரியாபட்டியில் பணிநியமனம் செய்யப்படும். SHARE IT

News September 24, 2025

விருதுநகர்: 2 விபத்துகள்., 2 பேர் பலி

image

கீழாண்மறைநாடு பகுதியில் டிராக்டரும், மோதிக்கொண்ட விபத்தில் டூவீலரில் வந்த மணிகண்டன் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீரசோழன் அருகே டூவீலரில் வந்த பார்த்திபன் உடன் லிப்ட் கேட்டு சித்ரா (31) என்பவர் வந்துள்ளார். அவ்வழியாக வந்த கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த சித்ரா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரு விபத்துகள் குறித்து அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 23, 2025

விருதுநகரில் 328000 பேருக்கு மகளிர் உரிமை தொகை

image

முதல்வர் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் இதுவரை 780 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 22000 மாணவர்களுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை, காலை உணவு திட்டத்தில் 72400 குழந்தைகள், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 328000 பேர் பயனடைவதாக விருதுநகரில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!