India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்களுக்கு உழவர் நல சேவை மையம் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் 30 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் ஆர்வமுள்ளோர் www.tnagrisnet.tn.gov.in என்ற அக்ரிஸ்நெட் வலைதளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம் என வேளான் இனை இயக்குனர் சுமதி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மக்களே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. <
விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக குறை தீர்ப்பு அலுவலராக ஜெயபிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இவர் ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று, பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார். மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அதனை 8925811346 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். SHARE
1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் SMS அனுப்ப – 9840983832
4.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
5.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
6.முதியோருக்கான அவசர உதவி -1253
7.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
விருதுநகர் மக்களே கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கபபடும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <
சிவகாசி அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் மாரிமுத்து மனைவி முத்துலட்சுமி குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 21ம் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை தின்றதாக கூறப்படுகிறது. இதில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். சிவகாசி அருகே புதுக்கோட்டையை சேர்ந்த சசிகுமார் (44) கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிவகாசி அருகே சித்துராஜபுரம் கால்நடை மருத்துவமனையில் இலவசமாக அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. எனவே தங்களுடைய நாய் மற்றும் பூனை ஆகிய செல்லப்பிராணிகளை சித்துராஜபுரம் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள கால்நடை பராமரிப்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. SHARE
சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் போலீசார் சட்டவிரோத பட்டாசுகளை தடுக்கும் பொருட்டு சிறப்பு ஆய்வு செய்தனர். அப்போது லட்சுமியாபுரம் – பெரிய பொட்டல் ரோட்டில் உள்ள குளியல் தொட்டி அருகில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அங்கு பட்டாசுகளை பதுக்கிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்த உடற்பயிற்சி கூடமானது தற்போது நவீனமயமாக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாதத்திற்கு ரூ.944, மூன்று மாதங்களுக்கு ரூ.2549 , ஆறு மாதங்களுக்கு ரூ.4248, ஒரு வருடத்திற்கு ரூ.6797 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.