India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ)<
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டத்தில் கிராம உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு மீண்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத படிக்க தெரிந்த 21 வயது நிரம்பியவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை வழங்கப்படும். மேலும், தகவல் & விண்ணப்பிக்க <
நேற்று தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பாரதிராஜா (19), ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் கல்குவாரியை நோக்கி சென்றபோது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல, ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் இருவர் மோட்டார்சைக்கிளில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மரத்தின் மீது மோதியதில் ஒரு சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இது குறித்து ராஜபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வட்டங்களில் 63 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுகள் நாளை காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறுகிறது. இதில் 19,083 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேலும், தேவர்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
விருதுநகர் மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். <
விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்தவர் ராஜ் (74). இவர் 2024ல் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவ்வழக்கில் சாத்துார் போலீசார் அவரை போக்சோவில் கைது செய்தனர். ஸ்ரீவி., போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டை மாவட்ட நிர்வாகம் வழங்கவும் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில், அறிஞர் அண்ணா விளையாட்டுப் போட்டிகள் – 2025 நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பங்குபெற விரும்பும் மாணவ/மாணவியர்கள் தங்களின் பெயரை மாவட்ட விளையாட்டரங்கில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்கள் பயன்பெற SHARE பண்ணுங்க.
2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 அன்று நடத்தப்படவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில், 2 அறிஞர் அண்ணா விளையாட்டுப் போட்டிகள் – 2025 நடைபெற உள்ளதை முன்னிட்டு பங்குபெற விரும்பும் மாணவ/மாணவியர்கள் தங்களின் பெயரை மாவட்ட விளையாட்டரங்கில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., தகவல்.
விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுலா சார்ந்த தொழில்முனைவோர்களிடமிருந்து விருதுநகர் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.tntourismawardscom என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இணையவழி மூலமாக செப்.30 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 73977-15688 என்ற எண்ணில் அழைக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.