Virudunagar

News August 6, 2025

விருதுநகர்: அரசு துறையில் வேலை

image

விருதுநகர் மக்களே.. தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் Office Assistant பதவிக்கு காலியாக உள்ள 16 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு 23.07.25 முதல் 14.08.25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 15,700 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவும். Share It.

News August 5, 2025

இறுதி கட்டத்தை எட்டியுள்ள மேம்பால பணிகள்

image

சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் துவங்கி ஓராண்டாகியுள்ள நிலையில் தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரூ.62 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய இப்பணி விறுவிறுப்பாக நடைபெற துவங்கி தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

News August 5, 2025

தொடர் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

image

சிவகாசி, வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழை காரணமாக பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவது உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிற்பகல் வரை வெயில் அடித்தாலும் பிற்பகலை தொடர்ந்து மழை பெய்து வருவதால் உற்பத்தி பாதித்துள்ளது.

News August 5, 2025

வேப்பிலைக்காரி அலங்காரத்தில் துர்க்கை பரமேஸ்வரி அம்மன்

image

சிவகாசி பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று ஆடிமாதம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வேப்பிலைக்காரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வேப்பிலையால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றதை தொடர்ந்து கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News August 5, 2025

அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

image

விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி உள்ளிட்ட அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர 31.08.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் நபர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 5, 2025

விருதுநகர் கூட்டுறவு வங்கியில் வேலை… JOB ALERT!

image

விருதுநகர் இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கு மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு <>இங்கே கிளிக்<<>> செய்து பார்க்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு செப். 12ல் நடைபெறும். உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க ஒருவருக்காவது கண்டிப்பாக உதவும்.

News August 5, 2025

விருதுநகர் மக்களே… இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..

image

▶️ டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர் 9444184000

▶️ இரா.ராஜேந்திரன் மாவட்ட வருவாய் அலுவலர் 04562-252348

▶️ மரு.க.பிர்தெளஸ் பாத்திமா எம்.டி. (சித்தா) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) 9445008161

▶️ டி.கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9498101455

இந்த முக்கியமான தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க…

News August 5, 2025

மூடிய ஆலையை திறந்து பட்டாசு தயாரிப்பு

image

வெம்பக்கோட்டை புல்லக்கவுண்டன்பட்டி வாகினி பட்டாசு ஆலை விதிமீறல் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆலையை போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒரு அறையில் விஜய கரிசல்குளத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (30), கருப்பசாமி (26) ஆகியோர் குருவி வெடி தயாரித்து கொண்டிருந்தனர். பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News August 4, 2025

சட்டவிரோதமாக பட்டாசு திரி தயாரிப்பு

image

வெம்பக்கோட்டை அருகே கண்டியாபுரம் ஜே.பி., மித்ரன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை விதிமீறல் காரணமாக சஸ்பெண்ட் ஆன நிலையில் சட்டவிரோதமாக இங்கு பட்டாசு தயாரிப்பு நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் ஆய்வு செய்தபோது, அங்கு ஒரு அறையில் பட்டாசுக்கான திரி தயாரிப்பது தெரிந்தது. போலீசாரை கண்டதும் இருவர் தப்பி சென்ற நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 4, 2025

விருதுநகரில் கைத்தறி கண்காட்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாக தரை தளத்தில் ஆக.7 அன்று “11-வது தேசிய கைத்தறி தினத்தைக்” கொண்டாடும் விதமாக சிறப்பு கைத்தறி கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை ஆட்சியர் சுகபுத்ரா துவங்கி வைத்து கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்.
மேலும் வன்னியப் பெருமாள் மகளிர் கலைக் கல்லூரியில் கைத்தறி இரகங்களைப் பிரபலப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

error: Content is protected !!