India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் 1 மாநகராட்சி 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களில் 450 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பெரும் அச்சுறுத்தலாக நாய் தொல்லை உள்ளது. இதில் கடந்த 2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மட்டும் 7246 பேருக்கு நாய் கடியால் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 17ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தென் இந்திய தங்க காசு என அழைக்கப்படும் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் 6 இதழ் கொண்ட பூ வடிவமும், மற்றொரு பக்கத்தில் புள்ளிகள் மற்றும் கோடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் வருகிற 30-ந்தேதி பிரதோஷம், 2-ந்தேதி அமாவாசை அன்று சுந்தர மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. சதுரகிரி கோவிலுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அறிவித்துள்ளனர் சிறப்பு பேருந்து வசதி உள்ளது. பகத்தர்கள் ஓடையில் குளிக்கவும், மது, போதைபொருட்கள் பாலித்தீன் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு தடை விதித்துள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் டிரான்ஸ்ட்போர்ட் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவைகளில் சட்டவிரோதமாக பட்டாசுகள், வெடிபொருள்கள், வெடிபொருள் சட்ட விதிகளுக்கு முரணாக பதுக்கி வைக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து காவல்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொண்ணாங்கன்னி கிராமத்தில் உள்ள வெங்கடேஷ்குமாருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்க பயன்படும் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இதணையடுத்து அப்பகுதியில் சாலையோரம் உள்ள காய்ந்த செடி கொடிகளுக்கு யாரோ தீ வைத்துள்ளனர்.அந்த தீ அருகே உள்ள கரும்புத் தோட்டத்திலும் பரவியதில்,அறுவடைக்கு தயாராக இருந்த 4 ஏக்கர் கரும்பு தீயில் கருகி வீணானது.
சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் பெண்களுக்கு நிகழும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிப்பது, அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலஅலுவலர் கெங்கா விஜயராகவன் கலந்துகொண்டு பெண்களுக்கு நிகழும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு தீர்வாக அமையும் சட்ட நுணுக்கங்களை எடுத்துறைத்தார்.
துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நாளை காலை பதவியேற்க உள்ளார். மனோ தங்கராஜ்,செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள்ளது. அதன்படி நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசிற்கு சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையாக வெயில் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை அடுத்து நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் மடவார்வளாகம் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி திருக்கோவிலின் எதிரே உள்ள தாமரைகுளத்தின் மையத்தில் அமையப்பட்டுள்ள மண்டபத்தின் கலசம் சேதமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி பட்டாசு ஆலையில் இன்று நடைபெற்ற வெடி விபத்தில் 25 வீடுகள் சேதமடைந்துள்ளது. ட்ரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் மற்றும் பிறவகை குடோன்களில் வெடிபொருள் சட்ட விதிகளுக்கு முரணாக சட்டவிரோதமாக பட்டாசுகள் மற்றும் பீடி பொருட்கள் பதுக்கி வைப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று(செப்.,28) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி விருதுநகர், தேனி, மதுரை, தென்காசி, நெல்லை, குமரிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மழை நீர் தேங்கவும்
வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் குடையுடன் செல்வது நல்லது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.