Virudunagar

News September 28, 2025

விருதுநகர்: EXAM இல்லை., 10th தகுதி! 1,096 காலியிடங்கள்!

image

தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th, டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.12,000 – ரூ.35,000 வரை. அக். 14க்குள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பணியின் அடிப்படையில் நீட்டிப்பு செய்யப்படும். நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. SHARE பண்ணுங்க

News September 28, 2025

விருதுநகர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க.

News September 28, 2025

அருப்புக்கோட்டை: குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

image

அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன்(39). இவர் நேற்று (செப். 27) மலைப்பட்டியில் உள்ள கல்குவாரி கிடங்கில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி முரளி கிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து முரளி கிருஷ்ணன் உடலை கை பற்றி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News September 28, 2025

விருதுநகர்: கிராம வங்கியில் வேலை! இன்றே கடைசி

image

விருதுநகர் மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 28க்குள் (இன்று) <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். சம்பளம் (Approx) ரூ.48,000 – ரூ.1,00,000 வரை. டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News September 28, 2025

உலகளவில் பெருமை சேர்த்த காரியாபட்டி பேராசிரியர்கள்

image

அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலை & எல்ஸ்வேர் நிறுவனம் இணைந்து உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் 3500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். அதில் காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் செல்வராஜ், ஜெபக்குமார் இம்மானுவேல் எடிசன் பெயர்கள் இடம் பெற்றது. செல்வராஜ் மருந்தியல் பிரிவிலும், ஜெபக்குமார் நானோ துகள்கள் தொடர்பாகவும் கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்

News September 28, 2025

விருதுநகர்: அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

image

மூவரைவென்றான் பகுதியைச் சேர்ந்தவர் கொத்தாளமுத்து. இவர் லட்சுமியாபுரம் டோல்கேட்டில் வாட்ச்மேன் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் கட்டிடங்களை சுற்றி வந்த போது 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. உடனடியாக நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் நத்தம்பட்டி போலீசார் ஆண் பிரதேத்தை மீட்டு இறந்தது யார் என விசாரித்து வருகின்றனர்.

News September 28, 2025

விருதுநகர்: மிதிவண்டி போட்டியை துவக்கி வைத்த ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் இந்து மேல்நிலைப்பள்ளியில் இன்று அண்ணா பிறந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

News September 27, 2025

விருதுநகர்: அணை சீரமைப்பு பணியை ஆட்சியர் ஆய்வு

image

வெம்பக்கோட்டை அனணயினை சீரமைத்தல் பணிக்காக ரூ.8.00 கோடி ஒதுக்கீடு செய்யபட்டு, நீர்தேக்கத்தின் அணுகு சாலை, ஆய்வு சாலை சீரமைத்தல் மற்றும் இடது, வலது புற கால்வாயினை தூர்வாருதல், கால்வாயின் குறுக்கே மடைகள் மறுகட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, இன்று(27.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

News September 27, 2025

விருதுநகர்: 10th Pass போதும், Post Office-ல் வேலை!

image

விருதுநகரில் இந்திய அஞ்சல் துறையில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் Post Office வேலை நிச்சயம்
1.துறை: இந்திய அஞ்சல் துறை
2.தேர்வு கிடையாது
3.கல்வி தகுதி: 10th Pass
4.வயது வரம்பு : 18 முதல் 40 வரை
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க<>: Click Here<<>>
6.சம்பளம்: ரூ.10,000- 29,380 வரை
7.கடைசி தேதி: 30.09.2025
சொந்த ஊரில் போஸ்ட் ஆபீஸ் வேலை Apply பண்ணுங்க! SHARE பண்ணுங்க!

News September 27, 2025

விருதுநகர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

விருதுநகர் மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04562-252678) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க

error: Content is protected !!