India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகரில் உள்ள தனியார் திரையரங்கில் நேற்று முன்தினம் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இதில் அஜித் ரசிகர்களுக்கும், தியேட்டர் பவுன்சர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் பணி முடித்து வந்த பவுன்சிலர் தனுஷ் குமாரை நகராட்சி திமுக கவுன்சிலர் மணிமாறன் உளிட்டோர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் கவுன்சிலர் மணிமாறன் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் +2 படித்த 110 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இலவச நீட் மற்றும் கியூட் நுழைவு பயிற்சி ஏப்.30 வரை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தேர்வு குறித்து முழு பயிற்சி அளிக்கப்படும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகரில் வரும் மே 15ஆம் தேதிக்குள் அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும். பெயர் பலகைகளை தமிழில் வைக்காத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே மாதவிடாய் காரணமாக மாணவியை வகுப்புக்கு வெளியே தேர்வெழுத வைத்து தனிமைப்படுத்திய விவகாரத்தில் பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி, உதவியாளர் சாந்தி ஆகியோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக மாநில பொருளாளர் சிவகாசி திலகபாமா வலியுறுத்தியுள்ளார். பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ் 21- 24 வயதிற்குட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு இணையதளத்தில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பயிற்சிக்காலத்தில் 12 மாதங்களுக்கு உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.5000 வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க ஏப்.15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சிவகாசி, நாரணாபுரத்தில் சிசிடிவி கேமராவுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை காவல் கண்காணிப்பாளர் கண்ணன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் விருதுநகர் மாவட்டம் முழுவதும் 8,135 சிசிடிவி பொருத்தப்பட்டு குற்ற சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் குற்ற சம்பவம் தொடர்பாக தனது 9940277199 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும், புகார் தாரரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 273 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. ஊதியமாக ரூ.3000-9000 வரை வழங்கப்படும். இதில் 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதிற்குட்பட்டவர்கள் இங்கே <
வெம்பக்கோட்டையில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் துவங்கி தற்போது 3ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. நுண் கற்காலத்தை அறியும் நோக்கில் துவங்கப்பட்ட இந்த அகழாய்வில் நுண்கற்காலம் சார்ந்த தொல்பொருட்கள் இதுவரை கிடைக்காததால் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்வதற்கான திட்டம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறப்பகுதிகளில் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியுடைய சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா ஏப்.3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனையொட்டி,நாளை காலை செப்பு தேரோட்டமும்,மாலை 5:30 மணிக்கு மேல் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.திருக்கல்யாண வைபவத்தின் போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருப்பதி ஶ்ரீனிவாச பெருமாள் சூடிய பட்டு வஸ்திரம்,மாலை உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஸ்ரீவி.கொண்டுவரப்பட்டு கோயில் செயல் அலுவலரிடம் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.