Virudunagar

News August 7, 2025

விருதுநகர் மாணவர்களே.. B.Ed-க்கு இன்று முதல் FEES கட்டலாம்!

image

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-2026-ம் கல்வியாண்டில் B.Ed/B.Ed(Spl) பட்ட வகுப்பில் மாணவர்கள் தங்களது சேர்க்கைக் கட்டணத்தை Online -ல் இன்று (07.08.2025) முதல் செலுத்தலாம் என பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்கள் <>www.tnteu.ac.in<<>> என்ற பக்கத்திற்குச் சென்று FEES செலுத்தலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News August 7, 2025

விவசாயிகள் மானியத்தில் ஊட்டச் சத்து பெறலாம்

image

திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி  ஒன்றியத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் உள்ள விவசாயிகள் சினையுற்ற கறவை பசுக்கள் வைத்திருப்பின் 50% மானியத்தில் ஊட்டச்சத்து பெற்று பயனடையலாம். இதில் அரசின் மானியத்தொகை ரூ.6500 + பயனாளியின் பங்குத் தொகை ரூ.6500  ஆகும். ஆர்வமுள்ளவர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரங்கமன்னார்

image

ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது  வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு ஆடி மாத ஏகாதசி முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

News August 6, 2025

மானிய விலையில் காய்கறி, பழச்செடிகள் தொகுப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற 6 வகையான விதைகள் அடங்கிய தொகுப்பு 100% மானியத்தில் ரூ.60 வீதம் 41,500 எண்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடித் தொகுப்பு 100% மானியத்தில் 25,850 எண்கள் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.

News August 6, 2025

ராஜபாளையத்தில் எடப்பாடியின் நாளைய கூட்டங்கள் ரத்து

image

’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பேரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக நாளை(ஆக.7) ராஜபாளையம் வர உள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு காலநிலை மாற்றத்தால் உடல் சோர்வு, தொண்டைவலி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே உடல்நலனை கருதி ராஜபாளையத்தில் நாளை காலை பங்கேற்க இருந்த உள்அரங்கு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News August 6, 2025

விருதுநகர்: 16 இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்களாக உயர்வு

image

▶️ஆமத்தூர்
▶️மாரனேரி
▶️எம்.புதுப்பட்டி
▶️மல்லாங்கிணர்
▶️பந்தல்குடி
▶️கீழராஜகுலராமன்
▶️சாத்தூர் தாலுகா
▶️அம்மாபட்டி – அப்பைநாயக்கன்பட்டி இணைப்பு
▶️ஏழாயிரம்பண்ணை
▶️ஆலங்குளம்
▶️மம்சாபுரம் – வன்னியம்பட்டி
▶️ஸ்ரீவி டவுன்- தலுகா
▶️நத்தம்பட்டி – கூமாபட்டி
▶️எம்.ரெட்டியாபட்டி – பரளச்சி
▶️நரிக்குடி – ஏ.முக்குளம்
▶️வீரசோழன் – கட்டனூர்

News August 6, 2025

நிதி ஆயோக் விழாவில் தங்கம் பெற்ற ஆட்சியர்

image

புதுதில்லி நிதி ஆயோக் அமைப்பால் நடத்தப்பட்ட முழு நிறைவு திட்ட இயக்கத்தில் முன்னேற விழையும் மாவட்டம் மற்றும் முன்னேற விழையும் வட்டாரம் திட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்ட ஆறு குறியீடுகளையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 100% நிறைவு செய்தமைக்காக மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பால் நமது மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 2 தங்கப் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மாவட்ட அமைச்சர்களிடம் காண்பித்தார்.

News August 6, 2025

விருதுநகர்: 239 பேரிடம் மோசடி செய்தவர் குண்டாஸில் கைது

image

சங்கரன்கோவிலை சேர்ந்த கங்காதரன் ராஜபாளையத்தை தலைமையிடமாக வைத்து மரக்கார் பிரியாணி கடையின் கிளை உரிமம் தருவதாகவும், மாதம் ரூ.50,000 லாபம் பெறலாம் என தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த 239 பேரிடம் ரூ.12 கோடி பெற்று மோசடி செய்து ஜூலை.7 அன்று சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இவர் பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டதாக தமிழகத்திலேயே முதல் முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

News August 6, 2025

விருதுநகர்: 64 ஆயிரம் சம்பளத்தில் வங்கியில் வேலை

image

SBI வங்கியில் Junior Associates பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 முதல் 64,480 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இன்று (ஆக.06) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.26. இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். Share It.

News August 6, 2025

விருதுநகர்: அரசு துறையில் வேலை

image

விருதுநகர் மக்களே.. தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் Office Assistant பதவிக்கு காலியாக உள்ள 16 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு 23.07.25 முதல் 14.08.25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 15,700 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவும். Share It.

error: Content is protected !!