India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்துல ஆளில்லாத ஒரு அமானுஷ்ய கிராமம் இருக்குன்னு சொன்னா அத நம்புவீங்களா? ஆமாங்க.. திருச்சுழி பக்கத்துல குச்சம்பட்டி அப்டிங்கிர ஒரு கிராமம். இங்க ஒரு வயதான தம்பதிய தவிர, வேற யாருமே இங்க இல்ல. ஆனா, முன்னாடி வாழ்ந்தவங்களோட வீடுகள் சிதிலமடைஞ்சு இருக்குறத பாக்க முடியும். இங்க சரியான வேலை இல்லாததால, இந்த கிராமத்த விட்டு போனதா சொல்றாங்க அந்த வயதான தம்பதி. கேக்கவே வித்தியாசமா இருக்குல.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்றுடன் பிளஸ் டூ தேர்வுகள் நிறைவு பெற்றது. இதில் இயற்பியல் தேர்வில் 13,745 பேர் விண்ணப்பித்த நிலையில் 13,630 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 115 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இதே போல் பொருளியல் தேர்வில் 7,289 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 7,140 பேர் மட்டுமே தேர்வு எழுதினார். 149 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
சென்னல்குடியை சேர்ந்த கருப்பசாமி(67), கேரளாவை சேர்ந்த விஷ்ணு(24) ஆகியோர் வச்சகாரப்பட்டி அருகே உள்ள தனியார் புளுமெட்டலில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் கருப்பசாமி கத்தியால் விஷ்ணுவை தாக்கி கொலை செய்ததற்காக 7.9.2020 அன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் கருப்பசாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ.6500 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் ஏப்.8 அன்று பங்குனி பொங்கல் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்.15 பொங்கல் விழாவும், ஏப்.16 அக்னி சட்டி, பூக்குழி விழாவும், ஏப்.17 திருத்தேர் மற்றும் ஏப்.18 பூ பல்லாக்கு நிகழ்வும் நடைபெற உள்ளது.
வைணவ தலங்களில் மிக முக்கியமான தலமாக திருவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் உள்ளது. அந்த ஆண்டாள் பாடி கொடுத்த, சூடிக்கொடுத்த எம்பெருமான் ஸ்ரீ வடபத்திர சாயிக்கு பங்குனி 11ஆம் நாளான நேற்று பால், இளநீர், தயிர் மற்றும் தேனில் அபிஷேகம் செய்யப்பட்டு சர்வ அலங்காரத்துடன் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு புறப்பாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டையில் குற்ற சம்பவங்களை தடுக்க நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியில் தற்போது வரை சுமார் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனுக்குடன் கண்டறிய இக்கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் குற்ற சம்பவங்கள் குறையும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
சிவகாசி பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் ஹெலிகாப்டர் ரைடு நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சுற்றிப் பார்க்கும் வகையிலான ஹெலிகாப்டரில் பயணிக்கும் நபர்கள் அனைவருக்கும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 25 முதல் மே 25ஆம் தேதி வரை நடைபெறும் பொருட்காட்சிக்கு செல்ல 3100 ரூபாய் மதிப்பிலான நுழைவு கட்டண டிக்கெட் இலவசமாக வழங்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில சுத்திப் பார்க்க எக்கச்சக்க டூரிஸ்ட் ஸ்பாட் இருக்கு.. அதுல முக்கியமா போக வேண்டிய 10 இடங்கல சொல்றேன் போய் பாருங்க..
ஆண்டாள் ரெங்கமன்னார் கோயில்
சதுரகிரி கோயில்
ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில்
மடவார் வளாகம் வைத்தியநாதர் கோயில்
ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயில்
செண்பகத்தோப்பு
அய்யனார் அருவி
ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில்
பிளவக்கல் அணை
குல்லூர் சந்தாய் நீர்த்தேக்கம்
Share It.
சாத்தூர் அருகே கோல்வார்பட்டியில் கோயில் கொண்டிருக்கும் அன்னை மீனாட்சி இப்பகுதி மக்களின் இஷ்டதெய்வமாக கோலோச்சி வருகிறாள். இங்கு அம்பாளும், சுவாமியும் கிழக்கு நோக்கி எழுந்தருளியும், மீனாட்சி திருக்கரத்தில் கிளிக்கு பதிலாக தாமரையை ஏந்தியபடி தரிசனம் தருகிறாள்.11 வாரங்கள் மீனாட்சியை வணங்கி, கடைசி வாரம் ஹோமம் செய்தால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகும், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும்.
சிவகாசி பராசக்தி காலனியைச் சேர்ந்தவர் சேதுராஜ்(47). உணவக ஊழியரான இவர் பணி முடிந்து திருத்தங்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னாலிருந்து வந்த மற்றொரு பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். விருதுநகர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.