Virudunagar

News October 10, 2025

BREAKING ஸ்ரீவி: கே.டி.ஆர். வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

image

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஶ்ரீவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி ஆஜராகவில்லை. இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார், வழக்கு விசாரணையை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News October 10, 2025

விருதுநகர் மக்கள் புகார் அளிக்க எண் வெளியீடு

image

விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கால இனிப்பு, கார பலகாரங்களை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பலகாரங்களின் தரம் குறைபாடு, சுகாதாரமற்ற கடைகள் குறித்து பொதுமக்கள் 04562-225255, 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக புகார் தெரிவிக்கலாம்.

News October 10, 2025

விருதுநகரில் ஊராட்சி துறையில் வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் விருதுநகர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் நவ.9 க்குள் விண்ணப்பிக்கலாம்.

News October 10, 2025

விருதுநகர்: 450 கிராம மக்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளில் 02.10.2025 அன்று நடைபெறவிருந்த கிராம சபைக்கூட்டமானது நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. மேற்படி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபைக்கூட்டம் நாளை(அக்.11) நடைபெற உள்ளது. இதில் கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து ஒப்புதல் பெறுதல், சாதிப்பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள், தெருக்களின் பெயரை மாற்றுதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

News October 10, 2025

சிவகாசியில் ரூ.14 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

image

சிவகாசி அருகே பாறைப்பட்டி பகுதியில் போலீசார் சட்டவிரோத பட்டாசு பதுக்கல் குறித்து சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியில் குடோன் ஒன்றில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த ரூ.14 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் கருப்பசாமி (30), சுப்புராஜ் (70) மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 10, 2025

விருதுநகர்: தலையாரி வேலைக்கு நாளை கடைசி நாள்

image

விருதுநகர் மாவட்டத்தில் 8 வட்டங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தற்போது அதிகபட்ச வயது வரம்பு தளர்வு செய்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் ஊதியமாக ரூ.11,000 – ரூ.35,100 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை, நாளை மறுநாள் கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் உங்கள் பகுதிக்கான விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளை<> இங்கே கிளிக்<<>> செய்து தெரிந்து கொள்ளலாம்.

News October 10, 2025

சிவகாசி காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்!

image

பட்டாசு வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியூர் வாடிக்கையாளர்கள் வாகனங்களில் வரதுவங்கியுள்ளனர். இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே காவல்துறை அறிவித்துள்ளதன் அடிப்படையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்களை மாநகருக்குள் இயக்க வேண்டாம் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 10, 2025

சிவகாசிக்கு புதிய டி.எஸ்.பி நியமனம்

image

சிவகாசி டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பாஸ்கரன் விழுப்புரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருப்பூர் மாநகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்த அனில்குமார் சிவகாசி டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ள அனில் குமார் விரைவில் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SHARE IT

News October 9, 2025

விருதுநகர்:EXAM இல்லை., TN Rights வேலை ரெடி!

image

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் TN Rights துறையில் பல்வேறு பணிகளுக்கு 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th முதல் பல்வேறு பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள் வரை இப்பணிகளுக்கு அக். 14க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்காலம். சம்பளம் ரூ.12,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். திறன் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிப்பு செய்யப்படும். இத்தகவலை வேலை தேடும் நபர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News October 9, 2025

நரிக்குடியில் விதி மீறும் வாகனங்களுக்கு அபராதம்

image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருச்சுழி மற்றும் நரிக்குடி போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அதில் விதிகளை மீறி செல்லும் டிப்பர் லாரிகளை அதிரடியாக சோதனை மேற்கொண்டு அபராதம் விதித்து வருகின்றனர். இதற்காக பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!