Virudunagar

News May 8, 2025

அரசு கல்லூரிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் விருதுநகர் மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் பிரிவு இளங்கலை பட்டப் படிப்புக்கு https://www.tngasa.in/ இணையதளத்தில் 07.05.2025 முதல் 27.05.25 வரை விண்ணப்பிக்கலாம். திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய இடங்களில் அரசு கல்லூரிகள் உள்ளன.

News May 7, 2025

விருதுநகர் : காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

image

விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️விருதுநகர் SP- கண்ணன் – 9940277199
▶️அருப்புக்கோட்டை DSP – மதிவண்ணன் -9894364326
▶️ராஜபாளையம் ம் DSP – ப்ரீத்தி – 9884215769
▶️சாத்தூர் DSP – நாகராஜன் – 9498784040
▶️சிவகாசி DSP – பாஸ்கர் -9840211811
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் DSP – ராஜா -8300002059
உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். (அவசிய தேவைக்கு மட்டும்)

News May 7, 2025

விருதுநகர்: வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள S.H.N எட்வர்ட் மேல்நிலைப் பள்ளியில் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் கலந்து கொள்ள <>இங்கு கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். வேலை தேடுவோருக்கு ஷேர் செய்யவும்.

News May 7, 2025

செல்வம் பெருக வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு *SHARE* செய்யுங்கள்.

News May 7, 2025

மாவட்ட ஆட்சியர் குற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவு

image

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாற்றம் சாதிச்சான்று பொதுமக்களுக்கு அரசு செய்து கொடுத்துள்ள சலுகைகளை பெறுவதற்கு அரசு அலுவலகங்களை அணுகும்போது அலுவலகத்திற்கு வெளியே அரசு சலுகைகளை பெற்றுத் தருவதாக ஏமாற்றி அவர்களிடமிருந்து பணங்களை பறிக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த (9791322979) தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

News May 7, 2025

மாவட்டத்தில் 193 காவலர்கள் பணியிட மாற்றம்

image

விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் பணி புரிந்த எஸ்.ஐ பார்த்திபன் விருதுநகர் தனிப்பிரிவு எஸ்.ஐ-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் சாத்தூர் டவுன், அம்மாபட்டி, வெம்பக்கோட்டை, மல்லி, எம் புதுப்பட்டி உள்ளிட்ட 14 காவல் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் போலீஸ் ஏட்டு உள்ளிட்ட 193 பேரை எஸ்.பி கண்ணன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News May 7, 2025

விருதுநகர் மாவட்டத்தில் 6 மையங்களில் நீட் தேர்வு

image

விருதுநகர் மாவட்டத்தில் வரும் மே.4ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நீட் தேர்வை 6 மையங்களில் 3012 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் 812 மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 629 மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 7, 2025

விருதுநகர்: தேசிய சுகாதார குழுமத்தில் வேலை

image

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்(1), நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர்(1), சோசியல் ஒர்க்கர்(1) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மே.9 க்குள் நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

விருதுநகர்: தேசிய சுகாதார குழுமத்தில் வேலை

image

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்(1), நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர்(1), சோசியல் ஒர்க்கர்(1) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மே.9 க்குள் நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

விருதுநகர் மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (ஏப்.30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் தொழிலாளர் தினமான நாளை மே.1ஆம் தேதியை  முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டுமென ஆட்சியர் ஜெயசீலன் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!