Villupuram

News March 13, 2025

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

image

மரக்காணம் அடுத்த மண்டைவாய்புதுக்குப்பத்தில் அமைந்துள்ள இறால் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்பவர் சுதாகர். இவர் கடந்த (மார்ச் 8) தேதி மின்மாற்றிக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (12.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 12, 2025

விழுப்புரத்தில் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

image

விழுப்புரம், டி.மேட்டுப்பாளையம் ஜெயந்திர சரஸ்வதி பள்ளி அருகில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி (ம) ஆராய்ச்சி மையத்தில் தமிழக அரசின் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி (SC/STமட்டும்) 14-03-2025, 15-03-2025, 17-03-2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News March 12, 2025

நெல் மூட்டையுடன் கிணற்றில் விழுந்த லாரி

image

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தமிழக அரசு மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைத்து வருகின்றனர். இன்று காலை நெல் மூட்டைகளுடன் லாரி கமிட்டியில் நின்றிருந்துள்ளது. அப்போது, லாரியின் அருகில் இருந்த மதில் சுவர் திடீரென  உள்வாங்கியதால் நெல் மூட்டைகளுடன் அருகில் இருந்த கிணற்றில் லாரி விழுந்தது.

News March 12, 2025

முதலமைச்சர் புதிய மருந்தகங்களுக்கு கலெக்டர் அழைப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறக்க விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசு முதல் கட்டமாக 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் டி.ஃபார்ம் முடித்தவர்கள் தொழில் தொடங்க முதல்வர் மருந்தகங்கள் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

இன்று மாலையுடன் புத்தகத் திருவிழா நிறைவு

image

விழுப்புரத்தில் தற்போது நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழா இன்று(மார்ச்.12) மாலையுடன் நிறைவுபெற உள்ளது. கடந்த மார்ச்.02 ஆம் தேதி துவங்கப்பட்ட இக்கண்காட்சி 10 நாட்களாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசி நாள் என்பதால் மக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இன்று மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதுவரை ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 12, 2025

Mobile App Developer பணிக்கு இலவச படிப்பு

image

தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் <>வேலை <<>>கிடைக்கும்.

News March 12, 2025

விழுப்புரத்திலிருந்து தி.மலைக்கு சிறப்பு ரயில்

image

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, வரும் வியாழக்கிழமை காலை 9.25க்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் (வ.எண் 06130) இயக்கப்படுகிறது. எதிர் வழித்தடத்தில் திருவண்ணாமலையில் பிற்பகல் 12:40க்கு புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண் 06129) பிற்பகல் 2:15-க்கு விழுப்புரம் வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

வட்டார வள பயிற்றுநர்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் கூடுதலாக வட்டார வள பயிற்றுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் 25 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் திட்ட இயக்குனர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கட்டிடம், ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம்-605502 என்ற முகவரியை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 12, 2025

பாஜக பெண் நிர்வாகி கைது

image

விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் பெஞ்சல் புயலின் போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ள சேதத்தை பார்வையிட வந்த தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது சேறு சகதியை வீசிய வழக்கில் தலைமுறைவாக இருந்து வந்த விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி முன்னாள் துணைத் தலைவி விஜய ராணியை இன்று திருவெண்ணைநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!