Villupuram

News March 14, 2025

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கி வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற இணையதளமான https://viluppuram.dcourts.gov.in/ ஐ அணுகி உறுப்பினர் சேர்க்கைக்கான தகுதி, அனுபவம், மதிப்பூதியம் மற்றும் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி தொடர்பான அனைத்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

News March 14, 2025

கஷ்டங்களை நீக்கும் வக்ர காளியம்மன்

image

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருவக்கரை கிராமத்தில் வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு ராஜகோபுரத்தை அடுத்து உட்பகுதியில் இடப்பக்கமாக அருள்தரும் வக்கிரகாளிம்மன் சன்னதி உள்ளது. ஜாதகத்தில் வக்ர சனி, வக்ர குருவால் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறவர்கள் திருவக்கரை வக்ர காளியம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டால் பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News March 14, 2025

பட்ஜெட்: அதிவேக ரயில் போக்குவரத்தை உருவாக்க ஆய்வு

image

விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். சென்னை – திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும என 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

திருமணமான பெண்ணை தாக்கிய பாய் பெஸ்ட்டி

image

திருக்கோவிலூர், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி இவர், கடந்த 10ம் தேதி, விழுப்புரம் அடுத்த கலிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்த, 22 வயதுடைய தனது பழைய பெண் நண்பரின் வீட்டிற்கு சென்று திருமணம் ஆன பிறகும், நட்பாக பழக வேண்டும் என கூறி தகராறு செய்துள்ளார். இதில் அப்பெண்ணை புண்ணியமூர்த்தி நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறை புண்ணியமூர்த்தியை கைது செய்தது.

News March 14, 2025

மின்சாரம் தாக்கி கோவில் பணியாளர் உயிரிழப்பு

image

வானூர் அடுத்த தைலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள அலுமினிய பைப்பிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை படுகாயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News March 14, 2025

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (13.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 13, 2025

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். 15ஆம் தேதிக்குள் <>விண்ணப்பியுங்கள்<<>>.

News March 13, 2025

பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

பௌர்ணமியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை செல்ல (TRAIN NO.06130) என்ற எண் கொண்ட ரயில் (மார்ச் 13) காலை 9.25 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 11.10 க்கு சென்றடயும் அதே மார்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து (TRAIN NO.06129) என்ற எண் கொண்ட ரயில் 12.40 புறப்பட்டு விழுப்புரத்திற்கு 14.15 க்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

பம்பை ஆற்றில் மூழ்கி கொத்தனார் உயிரிழப்பு

image

விழுப்புரத்தை அடுத்துள்ள டி.முத்தையால்பேட்டை, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (37), கொத்தனாராக வேலைப் பாா்த்து வந்த இவா், நேற்று முன்தினம் முத்தையால்பேட்டை பம்பை ஆற்றுக்கு குளிக்கச் சென்றாா். அப்போது திடீரென நீரில் மூழ்கி செந்தில்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News March 13, 2025

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

image

மரக்காணம் அடுத்த மண்டைவாய்புதுக்குப்பத்தில் அமைந்துள்ள இறால் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்பவர் சுதாகர். இவர் கடந்த (மார்ச் 8) தேதி மின்மாற்றிக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!