Villupuram

News November 25, 2024

ஒரே மேடையில் ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 

image

விழுப்புரத்தில் வரும் 29-ஆம் தேதி நடக்கும் 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். சமூக நீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்க பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. எதிர்ப்பு அரசியல் செய்து வரும் அதன் தலைவர்களும் தி.மு.க. அரசு அழைப்பை ஏற்று, ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பங்கேற்பர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

News November 25, 2024

விழுப்புரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் பம்பு செட்

image

விவசாயிகளுக்கு வீட்டில் இருந்தபடியே கைப்பேசி மூலம் இயக்கும் பம்பு செட் மானிய வழியில் வழங்கப்பட உள்ளது. பொது பிரிவினருக்கு 40% அல்லது ரூ.5000 மானியம், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கு 50% மானியம் அல்லது ரூ.7000 மானியம் இவை இரண்டில் எது குறைவோ அதை மானியமாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 04146 258951, 04147 294486 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.

News November 25, 2024

விழுப்புரம் அருகே 10 பேர் கைது

image

விக்கிரவாண்டியை அடுத்த மூங்கில்பட்டு ஏரிக்கரைப் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.அதில், பகுதியைச் சேர்ந்த தீபன், அருள்தாஸ், ராஜ்குமார், சின்னத்துரை,  ராமு, ஆனந்தன், புருஷோத்குமார் கார்த்திக், செல்வம் 10 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.

News November 25, 2024

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்  அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஓய்வூதியர்களின் நலனை காக்கும் வகையில் நவம்பர் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டம் நிர்வாக காரணங்களால் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 24, 2024

நீட் தேர்வு எதிர்க்கிறோம்- இந்திய மருத்துவ சங்கம்

image

இந்திய மருத்துவ சங்கம் வடக்கு மண்டல கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் அபுல் ஹாசன், பொதுமக்களுக்கு 70-80% வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அந்த வகையில் மருத்துவர்களின் பாதுகாப்பு சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அகில இந்திய மருத்துவ சங்கம் நீட்  தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

News November 24, 2024

ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் கூட்டம்  ஒத்திவைப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் தீர்குறைக்கும் நாள் கூட்டம் நவ.26ஆம் தேதி நடப்பதாக கலெக்டர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் நிர்வாக காரணங்களால் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் அலுவலகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது.

News November 24, 2024

விழுப்புரம் ஆட்சியர் தகவல்

image

2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதிச் சட்டத்தின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுவுக்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். விண்ணப்பங்களை இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 600 010 என்ற முகவரியில் டிச.6ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என விழுப்புரம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 24, 2024

சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க

image

உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.

News November 24, 2024

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. ஷேர் செய்யுங்க

News November 24, 2024

விழுப்புரத்தில் நாளை மின்தடை

image

விழுப்புரம் நகரப் பகுதிகளில் (நாளை நவ.25) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, திருச்சி பிரதான சாலை, நாராயணன் நகா், கே.கே.நகா், சாலமேடு, வழுதரெட்டி காலனி, என்.ஜி.ஜி.ஓ காலனி, ஆடல் நகா், பாண்டியன் நகா், ஜானகிபுரம், பெரியாா் நகா், லட்சுமி நகா், காந்தி நகா், கணபதி நகா், சுதாகா் நகா், அரசு ஊழியா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க

error: Content is protected !!