Villupuram

News March 18, 2025

மாற்றுத்திறனாளி மகனை காய்கறி பெட்டியில் தூக்கி வந்த பெற்றோர்

image

விழுப்புரம் அடுத்த மேல்காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கேடேசன். இவரது மகன் கோவிந்தராஜ்(26), பிறவியிலேயே கை, கால் செயலிழந்த, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை கடந்த ஆறு மாதமாக நிறுத்தப்பட்டது. இதனால் விரக்தியடைந்த பெற்றோர் நேற்று, கோவிந்தராஜை, காய்கறி பெட்டியில் வைத்து மொபட்டில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக குறை கேட்பு கூட்டத்திற்கு அழைத்து வந்தனர்.

News March 18, 2025

அரசு மரியாதையுடன் போலீஸ் ஏட்டு உடல் தகனம்

image

கஞ்சா குற்றவாளியை பிடிக்க முயன்றபோது இறந்த தலைமை காவலரின் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. விழுப்புரம் அடுத்த வளவனுார் தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(40). இவர், தொரவி கிராமத்தில், கஞ்சா கடத்தல் நபரை விரட்டிப் பிடிக்கச் சென்றபோது, மயங்கி விழுந்து நெஞ்சு வலியால் இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் அவரது குமாரகுப்பம் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

News March 18, 2025

இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (17.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 17, 2025

விழுப்புரத்தில் பணி நியமன ஆணை வழங்கல்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி -IV தேர்வில் தேர்ச்சி பெற்று விழுப்புரம் மாவட்ட வருவாய் அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.03.2025) வழங்கினார்.

News March 17, 2025

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (17.03.2025) பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ் உட்பட பலர் உள்ளனர்.

News March 17, 2025

அங்கன்வாடியில் ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர். அதிகபட்சம் 12ஆம் வகுப்பும், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 25-35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்துகொள்ள <>கிளிக் <<>>செய்யவும்.

News March 17, 2025

தலைமைக் காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தலைமைக் காவலர் சீனிவாசன்(40) மயங்கி விழுந்து நேற்று உயிரிழந்தார். விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்த இவர், கஞ்சா விற்பனை செய்த கலாநிதிமாறனை பிடிக்க சென்றபோது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சக காவலர்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

News March 17, 2025

லாரி மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

image

விழுப்புரம், அற்பிசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (62). இவர் நேற்று முன்தினம் பூவரசன்குப்பத்திலிருந்து அற்பிசம்பாளையத்திற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த லாரி மீது பைக் மோதியதில் பலத்த காயமடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2025

கயத்தூர் தலைமைக் காவலர் மறைவுக்கு முதலமைச்சர் நிதியுதவி

image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் சீனிவாசன், கயத்தூர் கிராமத்தில் ரோந்துப் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த விக்கிரவாண்டி காவல்நிலைய தலைமைக் காவலர் சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூறினார். இதையடுத்து 25 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

News March 17, 2025

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

image

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி வட்டம், நாட்டார்மங்கலம் வல்லம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற துரைக்கண்ணு மற்றும் மனைவி பச்சையம்மாள், கோபிகா (மகள்) என மூன்று பேரும் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!