India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக முன்னாள் எம்பியின் உதவியாளர் குமார்(71) காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சொத்திற்காக கொலை செய்து, செஞ்சி அருகே மேல்ஒலக்கூர் கிராமத்தில் புதைத்ததாக தாம்பரம் போலீசாரிடம் மூவரும் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில், இன்று(மார்ச்.21)செஞ்சி தாசில்தார் முன்னிலையில் குமாரின் சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாகர்ஷா தெருவை சேர்ந்தவர் முகமது யாசீர்(32). இவர் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு தொழுகைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்தபோது, ஆட்டோவை காணவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில் துரிதமாக செயல்பட்ட போலீசார், ஒருமணி நேரத்தில் ஆட்டோவை கண்டுபிடித்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசாரை, காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
திண்டிவனம் அய்யந்தோப்பு கல்லூரி செல்லும் சாலையோரம் தனியார் ரைஸ்மில் அருகே உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக ரோசணை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
செஞ்சி, மறைந்த முன்னாள் எம்.பி குப்புசாமியின் உதவியாளர் குமார் கொலை வழக்கில் தாம்பரம் காவல் உதவி ஆய்வாளர் நெல்சன் தலைமையில் செஞ்சி அடுத்த மேல் ஓலக்கூரில் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையில் ரவி என்பவர் குமாரை கடத்தி வந்து கொலை செய்து மேல் ஒலக்கூரில் புதைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ரவியுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு, குமார் உடலைத் தோண்டி விசாரணை நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் பனமலை ஊராட்சியில் போலியான இறப்புச் சான்றிதழ் வழங்கியதாக பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். உடனே மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட தாசில்தார் உத்தரவிட்டு விசாரணை செய்து பார்த்ததில் அது போலி சான்றிதழ் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த போலி சான்றிதழ் இன்று காலை ஆட்சியர் ரத்து செய்தார். ஆட்சியர் மேற்கொண்டு வரும் துரிதமான நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களுக்கு, தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இதில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு மார்ச்.24க்குள் அனுப்ப வேண்டும். ஷேர் பண்ணுங்க
செஞ்சி அருகே வசிக்கும் 16 வயது சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அரசு மருத்துமனையில் சோதனை செய்ததில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில், காட்டு சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த வினித்குமார் (23, பாலியல் வன்கொடுமை செய்தது தெரிவந்தது. புகாரின்பேரில் செஞ்சி அனைத்து மகளிர் காவல்துறையினர், வினித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் தென்கோடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன்( 22); இவர் 17 வயது சிறுமியை காதலித்து கடத்திச் சென்று, திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அர்ஜூனை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரத்தை சேர்ந்த காத்தமுத்து தனது தந்தை இறப்புச் சான்று பெறுவது தொடர்பாக மனு அளித்துள்ளார். இதற்காக நகராட்சி ஊழியர் மதன் பத்தாயிரம் லஞ்சம் கேட்ட போது விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்ததின் அடிப்படையில் அவர்களின் அறிவுரைப்படி இன்று(மார்.18) பாண்டியன் நகரில் உள்ள மதனுடைய இல்லத்தில் காத்தமுத்துவை வரவழைத்து பத்தாயிரம் லஞ்சமாக வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக, குழந்தைகளுக்கு(6 மாதம் முதல் 6 வயது வரை) விட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள், மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு, விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 – மார்ச் 22 வரை நடைபெறுகிறது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.