Villupuram

News March 24, 2025

விழுப்புரம்:  ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

image

விழுப்புரத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மாவட்ட அளவிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, தமிழ் ஆசிரியர் கழகம் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, வணிகவரி பணியாளர் சங்க பொதுச்செயலாளர் டேனியல் ஜெயசிங், வருவாய்த்துறை அலுவலர் சங்க பொதுசெயலாளர் சங்கரலிங்கம், சிறப்புரையாற்றினர்.

News March 24, 2025

விழுப்புரம்: உயிரிழந்த சிறுமிக்கு முதலமைச்சர் நிதியுதவி

image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் 10 வயது மகள் காயத்ரி ஆடு மேய்டு கொண்டு இருந்த போது பாறையை வெடிவைத்து தகர்த்தபோது சிதறிய கருங்கல் தலையில் விழந்ததில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் மூன்று லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

News March 24, 2025

விழுப்புரம்: புளியமரத்தில் லாபம் பார்க்கும் விவசாயி

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் குத்தம் பூண்டி கிராமத்தில் செந்தில் குமார் என்ற விவசாயி இதுவரையிலும் தோட்டக்கால் பயிர் மட்டும் செய்து வந்தார். செந்தில் குமார் புது முயற்சியாக ஹைப்ரெட் வகையான மூன்று வருடங்களில் காய் காய்க்கும் புளியங்கன்றுகளை விவசாயம் செய்து நல்ல லாபம் பெறுவதாக கூறுகின்றார். இதுவரையிலும் இந்த பகுதியில் இந்த விவசாயம் யாரும் செய்ததில்லை என குறிப்பிடத்தக்கது.

News March 24, 2025

விழுப்புரம்: மாற்றுத்திறனாளி பெண்ணை அலைக்கழிக்கும் அலுவலர்கள்

image

விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் வித்யாஸ்ரீ, 2 கைகள் அற்ற மாற்றுத் திறனாளி. கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியது. அது தொடர்பாக பட்டா மற்றும் வரைபடங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 6 மாதங்களாக அலைந்தும், இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக இன்று(மார்ச்.24) விழுப்பரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

News March 24, 2025

விழுப்புரம் TIDEL Parkல் வேலை- ரூ.1,87,000 வரை சம்பளம்

image

விழுப்புரம் டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 24, 2025

கப்பல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹூக்ளி கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் (எச்.சி.எஸ்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், புராஜக்ட் ஆபிசர் உள்ளிட்ட 24 இடங்கள் உள்ளன. 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார்ச். 24) <>இந்த லிங்க்கை கிளிக் <<>>செய்து பதிவு செய்யவும். ஷேர் பண்ணுங்க

News March 24, 2025

விழுப்புரம் அருகே மர்மமான முறையில் மாடுகள் இறப்பு

image

விழுப்புரம் கண்டாச்சிபுரம் அடுத்த காரணை ஊராட்சியைச் சேர்ந்தவர் அருணகிரி (42). விவசாயியான இவர், 4 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் கட்டப்பட்டிருந்த 4 சினை மாடுகளும் இறந்து கிடந்தன. தகவலறிந்த வி.ஏ.ஓ., அன்புவிழி மற்றும் ஆயந்துார் கால்நடை மருத்துவர் ரவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இறந்த மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

News March 24, 2025

தலையில் கல் விழுந்து சிறுமி பலி

image

விழுப்புரம் மாவட்டம், டி.கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி, 35. இவரது மகள் காயத்ரி(10). நேற்று இவர், தனது தாயுடன் அப்பகுதி வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். சங்கர் என்பவர் ஓடையில் இருந்த பாறைகளை ஜெலட்டின் குச்சியை வெடிக்க வைத்து தகர்த்தார். அப்போது, சிறுமியின் தலையில் கல் விழுந்து, தாய் கண்ணெதிரே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு காரணமான நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

News March 23, 2025

தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

image

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

News March 23, 2025

வளத்தி அருகே கார் மோதி நடந்த சென்ற பள்ளி மாணவி பலி

image

வளத்தி அடுத்த சண்டிசாட்சி தோட்டிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் தீபிகா அண்ணமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நீலாம்பூண்டியில் செஞ்சி சேத்பட் சாலையில் நேற்று காலை கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் தீபிகாவின் பின்னால் மோதியதில் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!