Villupuram

News September 14, 2025

விழுப்புரம்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

image

▶️தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சியில் வேலை – tnrd.tn.gov.in ▶️ இந்திய உளவுத் துறையில் Intelligence Bureau வேலை – https://www.mha.gov.in/ ▶️எஸ்பிஐ வங்கி – https://sbi.co.in/ ▶️ இந்தியன் ஆயில் ஜூனியர் ஆபீசர் வேலை – https://iocl.com/ ▶️இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Specialist Officer – www.iob.in/Careers ▶️கனரா வங்கியில் வேலை – https://www.canmoney.in/careers ▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 14, 2025

விழுப்புரம்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

விழுப்புரம் மக்களே! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News September 14, 2025

விழுப்புரம் மக்களே.. இதை தெரிஞ்சிகோங்க..!

image

விழுப்புரம் மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. வழக்கு நிலை உடனே உங்க Phone-க்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News September 14, 2025

விழுப்புரம்: ராமதாஸ், அன்புமணிக்கு தடை?

image

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான அதிகார மோதல் 8 மாதங்களாக நீடித்தது. இதையடுத்து, செப்.11ம் தேதி அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கி ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்தார். வரும் செப்.17ம் தேதி திண்டிவனத்தில் நடைபெறும் தியாகிகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால், நிகழ்ச்சிக்கு இருவருக்கும் தடைவிதிக்க திண்டிவனம் சார் ஆட்சியருக்கு டிஎஸ்பி பரிந்துரைத்துள்ளார்

News September 14, 2025

விழுப்புரம்: மண்ணெண்ணை குடித்த முதியவர் பலி

image

விழுப்புரம் வட்டம் தெளி கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி(85). இவர் கடந்த, 10ம் தேதி வீட்டில் கவனக்குறைவாக குடிநீர் என நினைத்து, மண்ணெண்ணையை குடித்தார். மயங்கி விழுந்த அவரை மீட்டு, உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(செப்.13) காலை உயிரிழந்தார். இதுகுறித்து, காணை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2025

விழுப்புரம்: 2586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்கு தீர்வு

image

விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று (செப்.13) நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் 2586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்கு, தீர்வு காணப்பட்டதாக தெரிவித்தனர். இதில் நீதிபதி மணிமொழி, சட்டப்பணிகள் ஆணையக்குழு செயலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

News September 14, 2025

செஞ்சியில் ரூ.6.8 கோடி நஷ்ட ஈடு

image

செஞ்சி ஒருங்கிணைந்த கோர்ட்டில் சட்டப்பணிகள் குழு தலைவர், நீதிபதி கதிரவன் தலைமையில், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி திவ்யா ஆகியோர் வழக்குகளை நேற்று(செப்.13) விசாரித்தனர். இதில் 114 வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.6.8 கோடி நஷ்ட ஈடு வழங்கபட்டது. ரூ.22 லட்சம் மதிப்பில் 34 வங்கி வழக்குகள் என மொத்தம், 149 வழக்குகள் ரூ.7.2 கோடி மதிப்பில் சமரச முறையில் முடித்து வைத்தனர்.

News September 14, 2025

விழுப்புரம்: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

image

விழுப்புரம் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 21.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க

News September 14, 2025

விழுப்புரம்: குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட விபரீதம்!

image

தி.வெ.நல்லூர் அடுத்த பல்லரிபாளையத்தை சேர்ந்தவர் குமார், மனைவி ராஜகுமாரி(27). குமார் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால், குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மன வருத்தத்தில் இருந்த ராஜகுமாரி, தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு கொண்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, அவர் இறந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 14, 2025

விழுப்புரம்: மண்ணெண்ணை குடித்த முதியவர் பலி

image

விழுப்புரம் வட்டம் தெளி கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி(85). இவர் கடந்த, 10ம் தேதி வீட்டில் கவனக்குறைவாக குடிநீர் என நினைத்து, மண்ணெண்ணையை குடித்தார். மயங்கி விழுந்த அவரை மீட்டு, உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(செப்.13) காலை உயிரிழந்தார். இதுகுறித்து, காணை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!