Villupuram

News March 26, 2025

விழுப்புரம் ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு 

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் சாலைப் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பேருந்துகளை சர்வீஸ் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்ற, இறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் விபத்துகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் உத்தரவிட்டார்.

News March 26, 2025

10வது பாஸ் போதும்; இலவச பயிற்சியுடன் வேலை

image

தமிழ்நாடு அரசு சார்பில், மருத்துவ துறை சார்ந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், முதியவர்களை பார்த்துக்கொள்ளும் வேலைவாய்ப்புகளை பெறலாம். 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பயிற்சி – 3 மாதம். இதற்கு வயது வரம்பு கிடையாது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தினை அணுகவும். ஷேர் பண்ணுங்க…

News March 26, 2025

முயல் வேட்டையின்போது துண்டான வாலிபர் விரல் 

image

விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியுடன் தென்பசார் காட்டுப் பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றார். துப்பாக்கியின் டிரிகர் பகுதி உடைந்திருப்பதை கவனிக்காமல் வெடிமருந்தினை லோடு செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில் அஜித்குமாரின் கட்டை விரல் துண்டானது. அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News March 26, 2025

கோர விபத்தில் கவிழந்த ஆட்டோ

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மூங்கிலான் (30), ரேவதி(27) தம்பதி. இவர்களது ஒரு வயது மகள் தன்விகா. மூங்கிலான் திண்டிவனத்திலிருந்து ஆட்டோவில் சாரம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் வந்த  குழந்தை உட்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 26, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (25.03 2025) இரவு 10.00 மணி முதல் நாளை காலை 5.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 25, 2025

விழுப்புரத்தில் இரவு நேர ரோந்து பாதுகாப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (25.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களில், பொதுமக்கள் தங்களது உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை தொடர்புகொள்ளலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே வழங்கப்பட்டுள்ளன.

News March 25, 2025

கம்பர் வழிபட்ட காளி கோயிலில் சிறப்பு வழிபாடு

image

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சின்ன செவலை கிராமத்தில் அமைந்துள்ள காளிகாம்பாள் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இக்கோயிலை புகழ்பெற்ற தமிழ் கவிஞர் கம்பர் வழிபட்டதாக கூறப்படுகிறது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் 9 நாட்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என நம்பிக்கை உள்ளது.

News March 25, 2025

உங்கள் கைரேகையை பதிவு செஞ்சிட்டீங்களா?

image

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களுடைய கைரேகையை கட்டாயம் ரேசன் கடைகளில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரும் தங்களின் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 25, 2025

இளைஞர் கொலை வழக்கில் இருவர் மீது குண்டாஸ்!

image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கடந்த 19ம் தேதி அன்று இளைஞர் ஜெயசீலன் கொலை செய்யப்பட்ட வழக்கில், மரக்காணம் அடுத்த கந்தாடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கரன்குமாரும், சுந்தரராமன் நேற்று(மார்ச் 24) கைது செய்யப்பட்டனர். மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரையின் அடிப்படையில், ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் குண்டா் சட்டத்தில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

News March 25, 2025

குறுக்கே வந்த நாய்; பயங்கர விபத்து

image

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே நாய் சென்றதால் ஆம்னி பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்தார். இதனால் பேருந்தின் மீது பின்னால் வந்த கார் மோதியதுடன், காரின் பின்னால் மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த 5 பேர் காயம் அடைந்தனர்.

error: Content is protected !!