India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று (டிச.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் வெள்ளத்தால், வீடு, உடைமைகளை இழந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை பாதிப்புகளை சீர் செய்யும் பணி நடப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு லீவ் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் விசிக பொதுச்செயலாளர் தொல் திருமாவளவன் இருவரும் இன்று உள்துறை இணை அமைச்சர் நித்தியானந் ராய்-ஐ நேரில் சந்தித்து, தமிழ்நாடு புயல் பாதிப்பிற்கு முதலமைச்சர் கேட்ட இடர் இடைக்கால நிவாரண தொகை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கடிதம் அளித்தனர். பாதிப்பு அதிகம் என்பதை நாங்களும் அறிந்திருக்கிறோம். நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் கூறியுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழைக் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச 05) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சி. பழனி உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக, வெள்ளம் ஏற்பட்டது. இதனால், விக்கிரவாண்டி வட்டத்தில் 6 பேர், விழுப்புரம் வட்டத்தில் 5 பேர், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் 2 பேர், வானூர் வட்டத்தில் ஒருவர் என இதுவரை 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மாவட்டத்தில் வெள்ளத்தால் 26 சாலைகள் சேதமடைந்த நிலையில், 17 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும்.
கனமழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,287 ஏரிகளில் 553 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன. ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 782 ஏரிகளில், 48 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 505 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இவற்றில் 103 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை சீர் செய்யும் பணிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
விழுப்புரத்தில் வழக்கத்தைவிட அதிகமான மழை பெய்துள்ளது.மாவட்டத்தில் வெளியேற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழுதடைந்த சாலைகள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 67 நிவாரண மையங்களில் 4,906 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் சேதமடை மின் கம்பங்களை சரி செய்ய 900 மின்வாரியப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2,000 வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டு, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக அதிகனமழை கொட்டித் தீர்த்ததால், விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (டிச.4) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் மற்றும் மீட்பு பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருவதால், விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பும். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (03.12.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் புயல், மழையால் இதுவரை 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 67 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 4,906 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 80,520 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹெக்டேருக்கு ரூ.22,500, மானாவாரிக்கு ரூ.8,500 தரப்படும். 26 சாகைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.