India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் மற்றும் விழுப்புரம் சுற்றியுள்ள ஒன்றியங்கள் கானை, விக்கிரவாண்டி, மைலம், வானூர், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், கண்டமங்கலம், மரக்காணம் ஆகிய ஒன்றியங்களில் இன்று மதியம் 2.30.மணி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்
NLC நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Overman & Mining Sirdar பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 171 காலி பணியிடங்கள் உள்ளன. டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பிக்கலாம். Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய <
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்துக்கான முகாம் நாளை 17-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். SHARE
மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த முத்துக்குமார். கோட்டக்குப்பத்தை அடுத்த அனிச்சம்குப்பம் பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அங்கு புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையைக் கடக்க சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து முத்துக்குமார் மீது மோதியதில் உயிரிழந்தார். கோட்டகுப்பம் போலீஸ் வழக்கு பதிவு.
ஒரு கோடி சித்தர்கள் வழிபட்ட அதிசய சிவாலயம் ஒன்று விழுப்புரம் மாவட்டம் ஒரு கோடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.ஒரு கோடி சித்தர்கள் சிவபெருமானை வழிபட்ட பகுதி என்பதால், இந்த ஊருக்கு ‘ஒருகோடி’ என பெயர் வந்தது என்கிறார்கள். கோடி கொடுத்த நாதரை வழிபட்டால், கோடி கோடியாய் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. தொழில், வியாபாரத்தில் சிரமப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 17ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. வேலை வாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன. இதில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிராதீங்க. ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (14.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் நகரில் இன்று(ஏப்.14) பிற்பகல் தவெக கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். தேசத் தியாகி அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் தெற்கு இளைஞரணி பொருளாளர் ஹரி தலைமை தாங்கினார். பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.