Villupuram

News May 8, 2025

அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2 மட்டும். மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (01.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News May 7, 2025

விழுப்புரம் காவல் அதிகாரிகள் எண்கள்

image

விழுப்புரம் SP – 9443043687, ADSP – 9443515959, 9445211119, விழுப்புரம் DSP- 9667477902, திண்டிவனம் DSP- 8610456860, செஞ்சி DSP- 8870763199, விக்கிரவாண்டி DSP- 9443034561, கோட்டக்குப்பம் DSP- 9486951354, குற்றப் புலனாய்பு பிரிவு DSP-9444450606, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு DSP- 9498169055. குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

News May 7, 2025

விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக மதுவிற்பனை செய்தால் போலீசில் புகாரளித்து சட்டநடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிலர் முன்னேற்பாடாக மதுபானங்கள் வாங்கி வைத்துக்கொண்டு அதிக லாபத்திற்காக விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து தெரிய வந்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

குழந்தை இல்லா சோகம்; இளைஞர் தற்கொலை

image

விழுப்புரம் அருகே ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கார்த்திக்(27). அரசு போக்குவரத்து கழக தற்காலிக கண்டெக்டர். திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த கார்த்திக், தனது வீட்டு மேல்தள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். ”தற்கொலை எதற்கு தீர்வு அல்ல”

News May 7, 2025

செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி (அ) பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை, துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்…

News May 7, 2025

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவி!

image

விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. மே 31-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது இணையதளத்திலோ இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதிக்கு ஏற்ப மாதம் ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்!

News May 7, 2025

குடிநீர் பிரச்சனையா? கவலை வேண்டாம்

image

கோடை காலம் தொடங்கி உள்ளதால் விழுப்புரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் பிரச்சனை தொடர்பான புகார் அளிப்பதற்கான புகார் எண் 044 -4567 4567 ஆகும். மேலும், கட்டணமில்லா எண் 1916 மூலம் புகார் தெரிவிக்கலாம். ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க 155340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

குடிநீர் பிரச்சனையா? கவலை வேண்டாம்

image

கோடை காலம் தொடங்கி உள்ளதால் விழுப்புரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் பிரச்சனை தொடர்பான புகார் அளிப்பதற்கான புகார் எண் 044 -4567 4567 ஆகும். மேலும், கட்டணமில்லா எண் 1916 மூலம் புகார் தெரிவிக்கலாம். ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க 155340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 30, 2025

விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்

image

விழுப்புரம் வி.மருதுார் காளியம்மன் கோவில் அருகில், ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைபொருள் பிரிவிற்கு தகவல் கிடைத்தது. தனி தாசில்தார் ஆனந்தன் மற்றும் ஆர்.ஐ.,க்கள் கண்ணன், லட்சுமிநாராயணன்,சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். 25 மூட்டைகளில்,1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக குடோனிற்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!