India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், மாவட்ட அளவிலான ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, இன்று (செப்.13) மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலர் உடனிருந்தார்.
விழுப்புரம் அருகே கோலியனூர் வாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சாகாவரம் பெற்றிருந்த மகிஷாசுரன் தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்கச் சிவன் உத்தரவிட்டார். அவனை அழித்தவர்களுக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க இத்தலத்திலுள்ள சிவபெருமாளை வணங்கி நிவர்த்தி அடைந்தனர். இந்த கோயிலில் வழிபட்டால் தலையெழுத்து மாறுமென்பது நம்பிக்கை. மாற்றத்தை எதிர்பார்க்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
நாளுக்கு நாள் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. சில சமயம் ஆன்லைனில் வாங்கும் பொருட்கள் சேதமடைந்த நிலையில் நம்மிடம் வந்து சேருகிறது. இதனை உரிய நிறுவனங்கள் மாற்ற மறுத்தாலோ (அ) பணத்தை திரும்ப தர மறுத்தாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் மாற்ற (அ) பணத்தை பெற உரிமை உண்டு. மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். SHARE
விழுப்புரம் மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டெலிவரி செய்யவேண்டும் என்பது விதி. ஆனால், பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!
விக்கிரவாண்டி, ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு(33). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மஞ்சு நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 9ம் தேதி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடனே சென்னை, கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று (செப்.12) உயிரிழந்தார். விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மக்களே, ரிசர்வ் வங்கியில் கிரேட்-பி பிரிவில் 83 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.55,200-ரூ.99750 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 21-30. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30 வரை <
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. வட்டாச்சியர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், கலந்து கொண்டு பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் மக்களே இன்று 13-ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய <
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(செப்.13) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% மற்றும் பிற பிரிவினர் 5% செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் <
Sorry, no posts matched your criteria.