Villupuram

News March 31, 2025

பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

image

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <>ஷேர் <<>>பண்ணுங்க

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 31, 2025

பைக் மீது பேருந்து மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு

image

திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ், ராகவன். நண்பர்களான இருவரும், நேற்று (மார்.30) காலை பைக்கில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்றனர். பைக்கை ராகவன் ஓட்டினார். அப்போது எதிரில் வந்த அரசு விரைவு பேருந்து பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தினேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராகவன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

News March 30, 2025

விழுப்புரம் விவசாயிகள் கவனத்திற்கு 

image

விழுப்புரம் மாவட்டத்தில் பி.எம் கிசான் ஊக்கத்தொகை பெறும் 89,958 விவசாயிகளில் தற்போது வரை 50,404 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 39,554 விவசாயிகள் ஏப்ரல் -8 ஆம் தேதிக்குள் தனி அடையாள எண் பெற வேண்டும், அப்போதுதான்  பி.எம் கிசான் ஊக்கத்தொகை  தொடர்ந்து பெற முடியும்  என்று வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 30, 2025

யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். <>ஷேர் <<>>செய்யுங்கள்

News March 30, 2025

இயற்கை உபாதை கழிக்க சென்றவர் உயிரிழப்பு

image

திண்டிவனம் அடுத்த தளவாய் கிராமத்தைச் சேர்ந்த பரணி (19), நேற்று முந்தினம் (மார்ச் 28) காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்றுள்ளார். ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த ரயில் அவர் மீது பலமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 30, 2025

ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை

image

குமரியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர், கோவில்பட்டியில் இருந்து தாம்பரத்திற்கு பயணம் செய்தார். நேற்று (மார்.29) அதிகாலையில் அந்த ரயில், உளுந்தூர்பேட்டையை கடந்து விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது கண்ணன் (33) என்பவர் பெண்ணிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 29, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (29.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 29, 2025

திருக்கோவிலூர்: 130 கோடியில் தடுப்பணை புதுப்பிப்பு

image

விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட திருக்கோவிலூர் தடுப்பணை மறுசீரமைப்புக்கு தமிழக அரசு 130 கோடி ஒதுக்கி உள்ளது. அதனை அடுத்து இன்று மார்ச் 29 தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள தடுப்பணையை பார்வையிட்டனர். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் வட்டாட்சியர் குமரவேலன் உட்பட பலர் இருந்தனர்.

News March 29, 2025

விழுப்புரத்தில் சனி தோஷம் நீக்கும் தலம்

image

விழுப்புரம், மொரட்டாண்டி கிராமத்தில் 27 அடி உயர பஞ்சலோக விக்ரகமாய் கையில் வில், அம்பும் மற்ற இரு கைகளில் அபய, வரத முத்திரையோடு சனிபகவான் அருள் பாலிக்கிறார் . சனிபகவானுக்கு எதிரே 54 அடி உயர விநாயகர், 12 ராசிகளை தன்னுடலில் நிறுவப்பட்டுள்ளார். இந்த அமைப்பு சனிபகவானின் உக்கிரத்தைத் தணிக்கும் வகையில் உள்ளதால் இவரை வழிபட்டால் சனி தோஷம் அகலும், சனிப் பார்வை நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!