Villupuram

News December 5, 2024

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

image

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் மட்டும் அடுத்தாண்டு ஜனவரி 2 முதல் 10ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மழைநீர் வடிந்து முறையாக பள்ளிகள் திறக்கப்படும் போது 10,11,12ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகளை நடத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News December 5, 2024

விழுப்புரத்தில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை உள்ள நாட்களில் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்து பள்ளிகள் திறக்கும்போது 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 24 – ஜனவரி 1 வரை அரையாண்டு விடுமுறை பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

News December 5, 2024

உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு நிவாரணம்

image

வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஃபெஞ்சல் புயலினால் உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையினை இன்று (05.12.2024) வழங்கினார். உடன் அரசு முதன்மைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பெ.அமுதா இருந்தனர்.

News December 5, 2024

அரசு முதன்மைச் செயலாளர் பேட்டி

image

விழுப்புரத்தில் புயல் வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண பொருட்களை இன்று அரசு முதன்மைச் செயலாளர் அமுதா ஐ‌ஏஎஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும். டோக்கன் விநியோகித்த 3 நாட்களில் அனைவருக்கும் பணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

News December 5, 2024

சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம்

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் சிறு வணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நாளை முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறுவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிறு வணிகர்களுக்கு உதவிக்கரம் நீட்டவே இந்த முகாம் நடத்தப்படுவதாகவும், விழுப்புரத்தில் தகுதியானவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை வணிகக் கடன் தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News December 5, 2024

விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. வெள்ளப்பெருக்கு மற்றும் மழைக் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச 06) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வரும் திங்கள்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

News December 5, 2024

விழுப்புரத்தில் 103 ஏரிகள் உடைப்பு

image

ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் அதிகனமழை பெய்தது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 240 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மாவட்டத்தில் உள்ள 782 ஏரிகளில் 48 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பொதுப் பணித்துறையின் ஏரிகளில் 505 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இவற்றில் 103 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

News December 5, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பின

image

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக 505 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் 779 ஏரிகளும் உள்ளன. வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து ஏரிகளுக்கு நீர்வரத்து வரத்தொடங்கியது. ஆனால் எந்தவொரு ஏரிகளும் அதன் முழு கொள்ளளவை எட்டவில்லை. ஆனால் பெஞ்ஜல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் இடைவிடாது வெளுத்துவாங்கிய கனமழையினால், மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பின.

News December 5, 2024

100 சதவீதம் மின்சாரம் வழங்கப்படும்- அமைச்சர்

image

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் ஒரு வார காலமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல கிராமங்களில் நேற்று வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 100 சதவீதம் மின்சாரம் வினியோகப்படும் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருக்கிறார்.

News December 5, 2024

ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் விநியோகம்: ராதாகிருஷ்ணன்

image

விழுப்புரத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, சர்க்கரை பருப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் இனிவரும் பேரிடர் காலங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கிச்சன் வாகனங்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

error: Content is protected !!