India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு நிர்வாக காரணங்களுக்காக கீழ்காணும் விவரப்படி பணியிட மாறுதல் வழங்கி விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப.,இதன் வழி உத்தரவிட்டுள்ளார். பணிமாறுதல் வழங்கப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உடன் பணியில் சேர்ந்து அறிக்கை அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று விழுப்புரம் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாவட்டச் செயலாளரும்,மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.அதில் தமிழ்நாட்டில் பொது தேர்வு நடைபெறும் நாட்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி தரக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் திரு.வி.க. சாலையில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருமண வரம் வேண்டுவோர், இங்குள்ள துர்க்கைக்கு 11 வாரம் நெய் விளக்கேற்றி, எலுமிச்சை மாலை அணிவித்தால் திருமணத்தடை நீங்கும். அதேபோல, தட்சிணாமூர்த்திக்கு நான்கு வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விரும்பிய வரம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 138 ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் வழங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு.ஷேக் அப்துல் ரகுமான் நேற்று(மார்ச்.31) மாலை தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம், மரக்காணம், வானூர், மயிலம், விக்கிரவாண்டி, முகையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் நிறத்திற்காகவும், சுவைக்காகவும் ஒரு சில ரசாயனங்களை பயன்படுத்தி ஊசியின் மூலம் தர்பூசணில் செலுத்துவதாக தற்போது நிலவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி. இதனை யாரும் நம்ப வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி தனது குடும்பத்துடன் நேற்று (மார்.31) காரில் திண்டுக்கல் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, விழுப்புரம் புறவழிச்சாலையில் பைக் மீது கார் லேசாக உரசியது. இதனால் ஆத்திரமடைந்த மூவர் காரை துரத்தி சென்று கார் கண்னாடியை அடித்து உடைத்தனர். 30 கி.மீ., வரை காரை துரத்தி சென்று மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் ராஜேஷ் (24). ராஜா(25) வினோத் (22) மூவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால், கணவன் மனைவி பிரச்சனை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. நீங்களும் இங்கு சென்று வாருங்கள். ஷேர் பண்ணுங்க.
தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் இரவு முதல் கட்டண உயர்வு ஐந்து முதல் பத்து சதவீதம் வரை சொந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மற்றும் நங்கிளிகொண்டான் சுங்கச்சாவடி மற்றும் பல சுங்கச்சாவடிகள் அடங்கும் என்பதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் செய்யும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.