Villupuram

News December 9, 2024

விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு 

image

தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநர் சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான அரசு போக்குவரத்துக் கழகங்களிலும், (TNSTC) அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 9, 2024

விழுப்புரத்தை சேர்ந்தவர் தங்கப்பதக்கம் வென்றார் 

image

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய வில்வத்தை போட்டி அண்மையில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த போட்டியில் விழுப்புரத்தைச் சேர்ந்த இருசன் என்பவர் பங்கேற்று முதலிடம் பிடித்த தங்கப் பதக்கம் என்றார். அவருக்கு வில்வித்தை சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்தனர். பதக்கம் வென்ற இருசன் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 8, 2024

ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் அடித்து செல்லப்பட்டு மாயம்

image

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைக்கட்டில் விழுப்புரம் மணி நகரைச் சேர்ந்த சின்னசாமி என்ற வாலிபர் இரண்டு நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமாகியுள்ளார். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News December 8, 2024

வேலை தேடுவோரை குறிவைத்து மோசடி: டிஜிபி

image

வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கு வரவழைத்து சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் சைபர் க்ரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து புகார் தெரிவிக்கலாம். அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.

News December 8, 2024

நாளை முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் (டிச.9) வழக்கம்போல் செயல்படும் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார். ஃபென்சல் புயல் கடந்த 7ஆம் தேதி இரவு கரையைக் கடந்த நிலையில், தொடர்ந்து 2 நாள்களுக்கும் மேல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால், பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நாளை முதல் வழக்கம்போல் செயல்படும். ஷேர் பண்ணுங்க

News December 8, 2024

விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (07.12.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 8, 2024

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி டிசம்பர் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று வரும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

News December 7, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் (09.12.2024) திங்கள்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணத்தினால் ஒத்திவைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

News December 7, 2024

விழுப்புரம் கட்டுப்பாட்டு அறையில் அமுதா IAS ஆய்வு

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும், பல இடங்களில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாகின. இதுதொடர்பாக, மத்திய குழு மற்றும் மாநில குழு ஆய்வு மேற்கொண்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை, அமுதா ஐ.ஏ.எஸ்., மற்றும் குழுவினர் ஆய்வு செய்து தகவல் பரிமாற்றம் பற்றி கேட்டறிந்தனர்.

News December 7, 2024

விழுப்புரத்தில் இயல்பு நிலை திரும்புகிறது

image

விழுப்புரம் மாவட்டம் புயல் வெள்ளப் பாதிப்பிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், அவர்களுக்கு தயாரித்து வழங்கப்படும் உணவுப் பொட்டலங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று மாநில வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா தெரிவித்தாா். மேலும், பொருட்களைப் பாக்கெட் செய்து வழங்கும் பணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!