Villupuram

News September 9, 2025

ட்ரோன் தொழிற்சாலைக்கு ஒப்புதல் கேட்ட விழுப்புரம் எம்.பி.

image

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டையில் ட்ரோன் தொழிற்சாலை அமைத்திட விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி மத்திய
பாதுகாப்புத் துறை நிலைக்குழுவின் தலைவர் ராதா மோகனிடம் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நேற்று கோரிக்கை கடிதம் அளித்துள்ளார். அப்போது விசிக தலைவர் தொல். திருமாவளவன் உடனிருந்தார்.

News September 9, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் வல்லம் ஒன்றியம் நெகனூர், மரக்காணம் ஒன்றியம் கொளத்தூர், வானூர் ஒன்றியம் திருச்சிற்றம்பலம், ஒலக்கூர் ஒன்றியம் ஓங்கூர் மற்றும் கண்டமங்கலம் ஒன்றியம் பாக்கம் பகுதிகளில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மருத்துவ காப்பீட்டு, ஆதார், இ சேவை உள்ளிட்ட வசதிகளை பொதுமக்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

விழுப்புரம்: நீரில் மூழ்கி பலி

image

கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியாா் சாவடி சோ்ந்தவா் மணிபால் (65),மீனவா் நேற்று அதிகாலை தனது படகில் கடலுக்குள் சென்று சின்ன முதலியாா் சாவடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது கடல் அலை சீற்றத்தில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மணிபாலுக்கு காயம் ஏற்பட்டு கடலில் மூழ்கி உயிரிழந்தாா். புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News September 9, 2025

விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு கிளிக்<<>> செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 8, 2025

விழுப்புரத்தில் பதவி உயர்வு தரும் அரசலீஸ்வரர் கோயில்

image

விழுப்புரம் ஒழிந்தியாம்பட்டு பகுதியில் உள்ளது அரசலீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். பதவி இழந்தவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள் இங்குள்ள அரசமர இலையால் மூலவருக்கு அபிஷேகம் செய்தால் பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ப்ரோமோஷனுகாக காத்திருக்கும் உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க

News September 8, 2025

விழுப்புரம்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

விழுப்புரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News September 8, 2025

வந்தே பாரத் ரயிலில் பெட்டிகள் அதிகரிப்பு: பயணிகள் மகிழ்ச்சி

image

விழுப்புரம் வழியாக இயக்கப்படும் சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில், பெட்டிகளின் எண்ணிக்கை 16-லிருந்து 20-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனிமேல் அதிக பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க முடியும். இந்த வழித்தடத்தில் அதிக பயணிகள் பயணம் செய்வதால், இந்த மாற்றம் ரயில் பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News September 8, 2025

மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியர் செயற்கை கால் வழங்கல்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (செப்.8) நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.75,000 மதிப்பிலான செயற்கைக் காலை வழங்கினார். உடன், அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் இருந்தனர்.

News September 8, 2025

கால்நடை பராமரிப்பு திறன் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு

image

விழுப்புரம் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் திறமை மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி, விழுப்புரம் துணை இயக்குநர் அலுவலகத்தில் செப்.11ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 8, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப். 8) மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். உடன் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!