India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரத்தில் இயங்கும் அனைத்து கடைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், தொழிற்சாலைகளில் தமிழ் பெயர் பலகைகள் மே 15ஆம் தேதிக்குள் அமைத்திட வேண்டுமென ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.
வளவனூர் அருகே தாதாம்பாளையம்,சோ்ந்த தமிழரசன் (20). அதே பகுதியை சேர்ந்த செல்வம் (21), இருவரும் நண்பா்கள். இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். பைக் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (08.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
1914ல் செஞ்சியை பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி செய்து வந்த போது, திண்டிவனம் சாலையில் உள்ள பங்களாவில் குடியிந்த பிரெஞ்சுகாரர்கள் தங்கள் வளர்ப்பு நாய் இறந்துவிட, அங்கேயே புதைத்து கல்லறை அமைத்து அதில் “பிராந்தா ஏ டியர் டாக் நவம்பர் 26 1914” என எழுதி வைத்துள்ளனர். நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாய்க்கு கட்டப்பட்ட கல்லறை இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க..
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)மூலம் மேனேஜர், நிறுவன செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் <
திருவம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழாண்டு அதிகளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பழங்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில்,ரசாயனம் கலப்படம் தொடர்பான வதந்தியால் தர்பூசணியை கொள்முதல் செய்ய யாரும் முன்வராத நிலை உருவாகி உள்ளது. அதனால் நிலத்தில் அழுகிய நிலையில் உள்ள தர்பூசணிகளை அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முட்டத்தூர் தனியார் நிறுவன ஊழியர் குமார் தனது பல்சர் பைக்கில் வந்தார். பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்று திரும்பிய சில நிமிடங்களில் பைக் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் அரங்கேறிய இந்த திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (07.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
‘ராஜா தேசிங்கு’ என்ற வார்த்தையை சினிமா மூலம் கேள்வி பட்டிருப்பீர்கள்.பலரும் அறிந்த புகழுக்குரிய ராஜா தேசிங்கு செஞ்சியை ஆண்ட மன்னர். மாவீரரான இவர் ஆற்காடு நவாப் உடனான போரில் மரணம் அடைய இவரது மனைவி ராணி பாய் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தார்.இந்த ராணி பாயின் நினைவாக உருவானது தான் “ராணிப்பேட்டை'”. நீங்காத புகழ் கொண்ட இவர்கள் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. <
Sorry, no posts matched your criteria.