Villupuram

News April 9, 2025

விழுப்புரத்தில் தமிழில் பெயர் பலகை கட்டாயம்

image

விழுப்புரத்தில் இயங்கும் அனைத்து கடைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், தொழிற்சாலைகளில் தமிழ் பெயர் பலகைகள் மே 15ஆம் தேதிக்குள் அமைத்திட வேண்டுமென ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.

News April 9, 2025

மரத்தில் பைக் மோதி விபத்து: கல்லூரி மாணவர் பலி

image

வளவனூர் அருகே தாதாம்பாளையம்,சோ்ந்த தமிழரசன் (20). அதே பகுதியை சேர்ந்த செல்வம் (21), இருவரும் நண்பா்கள். இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். பைக் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 8, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (08.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 8, 2025

செஞ்சியில் நாய்க்கு கட்டப்பட்ட நினைவிடம் 

image

1914ல் செஞ்சியை பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி செய்து வந்த போது, திண்டிவனம் சாலையில் உள்ள பங்களாவில் குடியிந்த பிரெஞ்சுகாரர்கள் தங்கள் வளர்ப்பு நாய் இறந்துவிட, அங்கேயே புதைத்து கல்லறை அமைத்து அதில் “பிராந்தா ஏ டியர் டாக் நவம்பர் 26 1914” என எழுதி வைத்துள்ளனர். நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாய்க்கு கட்டப்பட்ட கல்லறை இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க..

News April 8, 2025

ரூ.1 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிப்பது?

image

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)மூலம் மேனேஜர், நிறுவன செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: மேனேஜர் பதவிக்கு CA/CMA /MBA.செயலாளர்- பட்டப்படிப்புடன் ACS முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு- 45 வயது வரை. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

News April 8, 2025

வதந்தியால் பாதிக்கப்படும் விவசாயிகள்

image

திருவம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழாண்டு அதிகளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பழங்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில்,ரசாயனம் கலப்படம் தொடர்பான வதந்தியால் தர்பூசணியை கொள்முதல் செய்ய யாரும் முன்வராத நிலை உருவாகி உள்ளது. அதனால் நிலத்தில் அழுகிய நிலையில் உள்ள தர்பூசணிகளை அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

News April 8, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் பைக் திருட்டு

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முட்டத்தூர் தனியார் நிறுவன ஊழியர் குமார் தனது பல்சர் பைக்கில் வந்தார். பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்று திரும்பிய சில நிமிடங்களில் பைக் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் அரங்கேறிய இந்த திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News April 8, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (07.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 7, 2025

யார் அந்த ராஜா தேசிங்கு?

image

‘ராஜா தேசிங்கு’ என்ற வார்த்தையை சினிமா மூலம் கேள்வி பட்டிருப்பீர்கள்.பலரும் அறிந்த புகழுக்குரிய ராஜா தேசிங்கு செஞ்சியை ஆண்ட மன்னர். மாவீரரான இவர் ஆற்காடு நவாப் உடனான போரில் மரணம் அடைய இவரது மனைவி ராணி பாய் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தார்.இந்த ராணி பாயின் நினைவாக உருவானது தான் “ராணிப்பேட்டை'”. நீங்காத புகழ் கொண்ட இவர்கள் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!