India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையால் பாதித்த மக்களுக்கு, அரசு சார்பில் 313.67 கோடி ரூபாய் நிவாரணத் தொகை நேரடியாக வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதித்த குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 4,205 பேருக்கு 4 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில், பொதுமக்களுக்கு, அரசு சார்பில் 313.67 கோடி வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒளவையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார். சமூக நலன், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (15.12.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ள திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு உள்ளிட்டப் போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட மைய நூலகரை டிச.18-ஆம் தேதிக்குள் அணுகி இதுதொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
திண்டிவனம் அருகே பிளஸ் டூ மாணவி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் கொஞ்சிமங்கலம் ஆற்றில் ஏழு மாணவிகள் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக இரண்டு மாணவிகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.அதில் நர்மதா என்கிற மாணவியை பொதுமக்கள் மீட்டு புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.சிகிச்சை பலனளிக்காமல் நர்மதா உயிரிழந்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்டத் தொழில் மையம், ஃபெஞ்சல் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தங்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க சுய வேலைவாய்ப்புத் திட்ட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குகிறது. மேலும, விண்ணப்பப் பதிவு முகாம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட சுய வேலைவாய்ப்புத் திட்டங்களின் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டு அடிப்படையில் ரூ.2,000 வழங்குவதற்கான டோக்கன் கடந்த டிச.5ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டன. முதல் கட்டமாக 4,12,355 பேருக்கும், 2ஆம் கட்டமாக பேருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருசில இடங்களில் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என மக்கள் ஆதங்கம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீங்க வாங்கீட்டிங்களா?
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (14.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் வெள்ள நிவாரணம் மற்றும் பயிர் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், எதிர்வரும் 16.12.2024 திங்கள் கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த வி.சாலை அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. காது மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறன் மாணவியான இவர், கோலாலம்பூரில் கடந்த 5ஆம் தேதி தொடங்கிய 10ஆவது சர்வதேச ஆசிய பசுபிக் காதுகேளாதோருக்கான தடகள போட்டியில் 1,600 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும் வென்றார். வெற்றி பெற்ற மாணவியை அமைச்சர் பொன்முடி நேரில் அழைத்து பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.