India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த, மருத்துவர் ராமதாஸ் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்று கூறியுள்ளார். மேலும் அன்புமணி பாமக செயல் தலைவராக செயல்படுவார் என்றும், சட்டமன்றத்திற்கு நாடாளுமன்றத்திற்கு சென்றதில்லை,பதவி பெரும் ஆசை எனக்கு இல்லை என்றும்,2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
அக்னிவீர் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழிலும் தேர்வு எழுதலாம். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.
விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற 10ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை படித்த இளைஞர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை மே 31க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டு மைய அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த இஞ்சினியர் மோகன்குமார் 1.7.2023 அன்று விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே பைக்கில் சென்றபோது, லாரி மோதி உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை சேவகன், தாய் சாந்தி மற்றும் சகோதரர்கள் கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், மோகன் குமார் குடும்பத்திற்கு ரூ.1.44 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(09.04.2025) இரவு 10.00மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கொட்ட பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்கள் அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அல்லது 100ஐ டயல் செய்யலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (09.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் இல்லை எனினும், தனித்துவமான செஞ்சி பொன்னி, விழுப்புரம் தர்பூசணி, திண்டிவனம் பனிப்பயறு போன்ற பொருட்கள் புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றன. குறியீடு கிடைக்கும் பட்சத்தில் இந்த பொருட்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதோடு புவிசார் குறியீடு பொருட்கள் பட்டியலில் விழுப்புரமும் இடம் பெறும். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் அதிரடியாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 194 காவலர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி சரவணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பாராமெடிக்கல்/மெடிக்கல்/நர்சிங்// டிகிரி முடித்தவர்களுக்கு வரும் 11/4/2025 வெள்ளிக்கிழமை அன்று 150 க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் உள்ள ரானே சுப்ளையர்ஸ் நிறுவனத்தில் குவாலிட்டி செக்கர் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 18-25 வயதுக்குட்பட்டவர்கள் SSLC கல்வி தகுதி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். இப்பணிக்கு 20 காலி பணியிடங்கள் உள்ளன. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த <
Sorry, no posts matched your criteria.