Villupuram

News September 12, 2025

பாமகவில் அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே; முரளிசங்கர்

image

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர், பாமகவில் எல்லா அதிகாரமும் நிறுவனர் ராமதாஸிடம்தான் உள்ளது. வழக்கறிஞர் பாலு தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்பி வருகின்றார். மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறும் பாலுவை வன்மையாக கண்டிக்கிறோம், எச்சரிக்கிறோம் என்றார்.

News September 12, 2025

விழுப்புரத்தில் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், தமிழ்நாடு தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும், இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.tntourismawards.com பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

விழுப்புரம்: கணவன், மனைவி சடலமாக மீட்பு

image

செஞ்சி அடுத்த பசுமலைதாங்கல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நமச்சிவாயம், அவரது மனைவி பத்மாவதி இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பத்மாவதி கழுத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். நமச்சிவாயம் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்தார். இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

News September 12, 2025

பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் 2025 தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் அரசு பொது இ-சேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று செப். 20ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரகுமான் கேட்டுகொண்டுள்ளார்.

News September 12, 2025

விழுப்புரம்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

விழுப்புரம் மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 12, 2025

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், தமிழ்நாடு தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும், இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை www.tntourismawards.com பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

News September 11, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து பணி விபரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 11, 2025

விழுப்புரம்: அண்ணன் தங்கைகள் சாதனை

image

விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டை சேர்ந்தவர்கள் பரசுராமன்-தமிழ்செல்வி தம்பதியின் மூத்த மகன் சிவபாலன்,17; இவர் முட்டத்துார், பள்ளியில் +2 படிக்கிறார். இவரது தங்கை கனிஷ்கா,10;மற்றொரு தங்கை தீக்க்ஷா ,7; மூவரும் இந்தாண்டு நடந்த மாவட்ட, மாநில சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்து, சாதனை படைத்துள்ளனர். மூவரையும் கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

News September 11, 2025

விழுப்புரம்: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

image

விழுப்புரம் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025. SHARE பண்ணுங்க!

News September 11, 2025

சர்வதேச இளைஞர் தின மாரத்தான் ஓட்டம்

image

விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் சர்வதேச இளைஞர் தின விழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. இதனை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின், பேசுகையில் கல்லுாரிகளில் செயல்பட்டு வரும் செஞ்சுருள் சங்க மாணவர்கள் மூலம், பால்வினைய், காசநோய் மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஓட்டம் நடந்ததாக கூறினார்

error: Content is protected !!