Villupuram

News September 12, 2025

விழுப்புரம்: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

image

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% மற்றும் பிற பிரிவினர் 5% செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் <>இந்த<<>> லிங்க் / மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணபிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 12, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மழை அளவு நிலவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று(செப்.11) பதிவான மழையின் அளவு
▶️ ஆனந்தபுரம் – 45.2 மிமீ
▶️ முண்டியம்பாக்கம் – 38 மிமீ
▶️ நெமூர் – 29.2 மிமீ
▶️ கஞ்சனூர் – 26.4 மிமீ
▶️ சூரப்பட்டு – 20 மிமீ
▶️ கோலியனூர் – 18 மிமீ
▶️ வளவனூர் – 16 மிமீ
▶️ விழுப்புரம் – 14 மிமீ
▶️ கேதார் – 14 மிமீ
▶️ முகையூர் – 12 மிமீ
▶️ வானூர் – 12 மிமீ
இன்றும்(செப்.12) மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News September 12, 2025

தென்பெண்ணை ஆறு: வெள்ள அபாய எச்சரிக்கை

image

சாத்தனூர் அணை நீர்த்தேக்க விதியின்படி முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் உபரி நீர் அணையின் நீர்மின் நிலையத்தின் வழியாக முதல் கட்டமாக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News September 12, 2025

விழுப்புரம் பொது விநியோக குறைதீர் முகாம்

image

பொதுவிநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை செப்.13 ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் குறைதீர் முகாம் நடக்கிறது.மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான தனி கோரிக்கை ஆகிய மனுக்கள் வழங்கலாம். பொதுமக்கள் என் முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

விழுப்புரம்: பத்திரம் தொலைந்தால்… இதை செய்யுங்க

image

விழுப்புரம் மக்களே, நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். <>இந்த இணையதளம்<<>> மூலம் பத்திரம் மட்டுமல்லாமல் நிலம் குறித்த பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் எளிதாக பெறலாம். SHARE பண்ணுங்க

News September 12, 2025

விழுப்புரம்: 8th pass போதும்! உள்ளூரில் அரசு வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள எழுத்தர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிக்கு ஏற்ப 8 முதல் 10ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியின் அடிப்படையில் ரூ.15,700 – ரூ.Rs.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் செப்.30க்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News September 12, 2025

விழுப்புரம்: அரசு வேளாண் கல்லூரி அமைக்க கோரிக்கை

image

விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. இங்குள்ள மாணவர்கள் வேளாண் சார்ந்த பின்புலத்தில் வளர்வதால், வேளாண் படிப்பில் சேர விரும்புகின்றனர். இம்மாவட்ட மாணவர்கள் வேளாண் படிப்பிற்காக கோயம்புத்துார், சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லுாரி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

News September 12, 2025

கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

image

விழுப்புரம் மாவட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவி தொகையுடன் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கப்படுகிறது என, தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்; 1400 கட்டுமான தொழிலாளர்களுக்கு, திண்டிவனம், மொளசூர் அரசு தொழிற் பயிற்சி மையத்தில், வரும் 15ம் தேதி இந்த பயிற்சி துவங்கும் எனவும், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

சென்னை செல்லும் ரயில்களின் சேருமிடம் மாற்றம்

image

திருச்சியில் இருந்து விழுப்புரம் வழியாக தாம்பரம் வரை செல்லும் Rockfort Express, Madurai Express ரயில்கள், வருகின்ற செப்.17ம் தேதி முதல் பழையபடி சென்னை எழும்பூர் வரை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் கட்டுமான பணிகள் காரணமாக தாம்பரம் வரைச் சென்ற நிலையில், பணிகள் நிறைவடைந்ததால் செப்.17 முதல் எழும்பூர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 12, 2025

விழுப்புரத்தில் 5 கோடி ரூபாய் மோசடி

image

விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையத்தைச் சேர்ந்த மஹதி என்ற முதியவரிடம், அரண்மனை கட்ட ஒப்பந்தம் செய்து, 5 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மயிலாடுதுறை பூம்புகார் பகுதியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் சித்தார்த் என்பவரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பணத்தை பெற்றுக்கொண்டு கட்டிடம் கட்டாமல் சித்தார்த் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

error: Content is protected !!