Villupuram

News April 18, 2025

சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

image

விழுப்புரத்தில் காலியாக உள்ள 288 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.<> இணையதளம்<<>>

News April 18, 2025

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

image

மேல்மலையனுார் அடுத்த கோவில்புரையூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது விவசாய நிலத்திலிருந்த 55 அடி ஆழ கிணற்றில் நேற்று காலையில் பசு மாடு ஒன்று விழுந்து விட்டது. தண்ணீரில் தத்தளித்த பசு மாட்டை மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முருகேசன், பரஞ்ஜோதி மற்றும் வீரர்கள் கிணற்றில் இறங்கி உயிருடன் மீட்டு வெளியே எடுத்தனர். பசுவை மீட்ட வீரர்களை சுற்று வட்டார மக்கள் வெகுவாக பாராட்டினர்.

News April 18, 2025

கிருமி நாசினி குடித்து முதியவர் தற்கொலை

image

வானூர் வட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் மோகன்(70) என்பவர் உடல்நலக் குறைவால் கடந்த மார்ச்.24ம் தேதி கிருமிநாசினி குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(ஏப்.16) மாலை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 17, 2025

கஷ்டங்களை நீக்கும் முருகன் தேங்காய் பரிகாரம்

image

உங்களுடைய வாழ்வில், கடினமான கரடு முரடான பாதைகள் இருந்தால், அந்த பிரச்னைகளிலிருந்து விடுபட முருகனை நினைத்து தேங்காய் பரிகாரத்தை செய்து பாருங்கள். மூன்று தேங்காய்களை இரண்டாக உடைத்து, ஒரு வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதற்கு மேலே இந்த தேங்காய் மூடி களை அடுக்கி, தீபம் ஏற்றி உங்களுடைய பிரச்சனையை முருகப்பெருமானிடம் சொன்னால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

வேலைவாய்ப்புகளை தேடுபவரா நீங்கள்?

image

தமிழ்நாடு தனியார் வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் எளிமையாக அறிந்துகொண்டு விண்ணப்பிக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் வேலைவாய்ப்புகளுக்கான https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற தனிப்பட்ட இணையதளம் செயல்படுறது. இதில் குறைந்தபட்சம் ரூ.7,500 முதல் அதிகபடியாக ரூ.1 லட்சத்திற்கு அதிகமான சம்பளத்தில் 30,390 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

விழுப்புரத்தில், 200 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த<> லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கணவனை இழந்த அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25 – 35 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News April 17, 2025

விழுப்புரம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

image

விழுப்புரத்தில் வேளாண் இணை இயக்குநா் எஸ்.ஈஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு, மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை,வேளாண் வணிகம் துறைகளைச் சார்ந்த கள அலுவலா்கள், மகளிா் திட்ட சமுதாயப் பயிற்றுநா்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு, விவசாயிகளுக்கான தனி அடையாள எண் வழங்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஏப்.30-க்குள் தனி அடையாள எண் பெற பதிவு செய்துகொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க.

News April 17, 2025

திரெளபதி அம்மன் கோவிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள்

image

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் அடுத்த மேல்பாதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திறக்கப்பட்டது. இன்று காலை கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், பட்டியலின மக்கள் கோயிலுக்கு உள்ளே சென்றனர். முதல் முறையாக உள்ளே சென்று திரெளபதி அம்மனை தரிசித்ததாக மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பட்டியலின மக்கள் உள்ளே சென்று வழிபடுவதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று ஐகோர்ட் தெரிவித்திருந்தது.

News April 16, 2025

அமைதி தரும் மரக்காணம் கடற்கரை

image

விடுமுறை தினத்தில் வெளியில் சென்று வர அருகிலேயே சிறந்த சுற்றுலா தலமாக மரக்காணம் கடற்கரை உள்ளது. கீழக்கு கடைகரையோரம் அமைந்துள்ள இந்த பகுதியின் அமைதியான சூழல் மனதுக்கு அமைதி தரும். அமைதியை விரும்புவோர் நிச்சயம் சென்று வரலாம். இங்குள்ள உப்புத் துறை இந்த கடற்கரையின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இப்பவே உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க

News April 16, 2025

மேல்மலையனுார் கோயிலில் காணிக்கை வசூல்

image

மேல்மலையனுார் அங்காளம்மன் கோயில்  உண்டியல் எண்ணும் பணி நேற்று ஏப்.15 காலை துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், துணை ஆணையர் சிவலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.73 லட்சத்து 61 ஆயிரத்து 483 ரொக்கம் ,190 கிராம் தங்கம், 902 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

error: Content is protected !!