India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில், 3 சகோதரர்கள் லோகேஷ், விக்ரம், சூர்யா ஆகியோர் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, லோகேஷ் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்காக விக்ரம், சூர்யா இருவரும் கால்வாயில் குதித்த நிலையில், மூவரும் மாயமாகினர். நீரின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால், இளைஞர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – தென்மேற்கு திசையில் நாளை (டிச.24) தென்மேற்கு வங்கக் கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாளை (டிச.24) விழுப்புரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் பண்ணுங்க
திமுக கழகத் தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இன்று திமுக செயற்குழு கூட்டம் காலை 10 மணி அளவில் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுக செயற்குழு கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் பொறுப்பு மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான முனைவர் க.பொன்முடி வனத்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமையில், அம்பேத்கரை விமர்சித்த அமித்ஷாவை கண்டித்து, அக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழரசன் உள்ளிட்ட 34 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல், மற்றோரு இடத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் 93 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
ஃபென்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித பாகுபாடும் காட்டாமல் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் சி.வி. சண்முகம் வலியுறுத்தினார். நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பேசிய அவர், “நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். அதுபோல பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்களைக் கணக்கெடுத்து உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்” என்றார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (21.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வழியாக கன்னியாகுமரிக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் இயக்குகிறது. சிறப்பு ரயில் டிச.24, 31 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் அதிகாலை 12.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு குமரி சேரும். மறு மார்க்கத்தில் டிச.,25, ஜனவரி 1 புதன்கிழமைகளில் குமரியில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்துக்கு நிரந்தர சீரமைப்பு பணிகளுக்கு ரூ.1863.52 கோடி நிதி ஒதுக்கக்கோரி அரசுக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்து பாதிப்புகள் ஏற்பட்டன. தமிழக அரசு, முதலமைச்சர் நடவடிக்கையால், பெஞ்சல் புயல் பாதிப்பில் இருந்து விழுப்புரம் மாவட்டம் விரைந்து செயல்படும்.
வடவாம்பலம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் தீபலோகேஷ் (7). இவர், வளவனுாரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் பள்ளி முடிந்ததும், வழக்கம்போல் தீபலோகேஷ் உள்ளிட்டோர் சந்திரமோகன் (56) என்பவரின் ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது, விழுப்புரம் – புதுச்சேரி நெடுஞ்சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்ததால், ஆட்டோ கவிழ்ந்தது. அதில் தீபலோகேஷ் சம்பவ இடத்திலே இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (60). இவர் தனது மனைவி ராஜேஸ்வரி உடன் நேற்று பைக்கில் வி.சாலை அருகே பைபாஸ் சாலையை கடக்க முயன்றார். அப்போது கார் ஒன்று இவர்கள் மீது பலமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.