India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவிலிருந்து குட்கா வாங்கி வந்து, விக்கிரவாண்டி சாலை பகுதியில் விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளர் சீனிவாசன் & சுரேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.30,000 மதிப்புள்ள 20 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் சட்டவிரோத குட்கா விற்பனை தடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், பூதமேடு துணைமின் நிலையத்தில் இன்று (செப்.,16) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, சோழங்கனூர், சோழம்பூண்டி, எடப்பாளையம், அரியூர், வெங்கந்தூர், ஆத்தனூர், பூதமேடு, ஒரத்தூர், சாணிமேதூர், தென்னமாதேவி, திருவாமாத்தூர், அயன்கோவில்பட்டு & அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.15 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உச்சநீதிமன்றத்தின் வக்ஃபு திருத்தச் சட்டத்தை வரவேற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ‘வக்ஃபு திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். மக்களிடம் நீதித்துறையின் மீதான நம்பிக்கை நசிந்துவரும் சூழலில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது’ என தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் கடந்த 2010-11ம் நிதியாண்டில் இருந்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இதுவரை இலவச பயிற்சி மையத்தில் படித்து 855 பேர் அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் படித்த இளைஞர்கள், பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தரம்சந்த் ஜங்ஷன் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த திண்டிவனத்தை சேர்ந்த உஷா தேவி மற்றும் பக்தூர் தாஸ் ஆகிய இருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 15கி எடை கொண்ட குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவமால் மருதூர் பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பிரவீன் குமார் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கண்டமங்கலம் போலீசார், பிரவீன் குமாரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பெற்றோர் இருந்தால் என்ன கிடைக்குமோ அதை அந்தக் குழந்தைகளுக்கு “அன்புக்கரங்கள் திட்டம் ” மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகின்றார். இத்திட்டம் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (செப்.15) டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, காலி மதுபாட்டில்களை மாலையாக அணிந்து, ஊழியர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதில், ஏராளமான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.