Villupuram

News April 27, 2025

கேட்ட வரம் தரும் அற்புத கோவில்

image

விழுப்புரம் மாவட்டம் திரு.வி.க. சாலையில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருமண வரம் வேண்டுவோர், இங்குள்ள துர்க்கைக்கு 11 வாரம் நெய் விளக்கேற்றி, எலுமிச்சை மாலை அணிவித்தால் திருமணத்தடை நீங்கும். அதேபோல, தட்சிணாமூர்த்திக்கு நான்கு வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விரும்பிய வரம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க

News April 27, 2025

சாமிக்கு பரிகாரம்… நாடகமாடிய 5 பவுண் பரித்த இருவர் கைது

image

விழுப்புரம் முட்டத்தூரில் கடந்த 22-ம் தேதி குழந்தை வரம் வேண்டி சாமிக்கு பரிகாரம் செய்வதாக கூறி 5 பவுன் பறித்து சென்றுள்ளனர். விசாரணை நடத்திய போலீசார் வேலூரை சேர்ந்த வல்லரசு, வள்ளியம்மாளை கைது செய்தனர். விசாரணையில் வள்ளியம்மாள் முதல் நாள் தேன் விற்பது போல் வந்து வீட்டை நோட்டம் பார்த்துள்ளார். வீட்டில் குழந்தை இல்லாதவர்கள் பற்றி தகவலை மகன் வல்லரசுவிடம் கூறியது விசாரணையில் தெரியவந்தது.

News April 26, 2025

விழுப்புரத்தில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் நகரத்தில் அமைந்துள்ள VRP மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற மே.10ம் தேதி மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு கலந்துகொள்ள உள்ளனர். இந்த முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 26, 2025

விழுப்புரத்தில் குரல்வளத்தை சரி செய்யும் சிவன் கோயில்

image

விழுப்புரம் திருவக்கரையில் அருள்மிகு மகாகாளீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளளது. இந்த கோயிலில் அம்பிகை மதுர சுந்தரநாயகியாக இருக்கிறார்.
முன்னொரு காலத்தில் ஓர் அவமானத்தால் சிவன் 3 லிங்கங்களாக உடைந்த வரலாறும் இங்குள்ளது. குரல்வளம் பெருகவும், கலைத்துறையில் சாதிக்கவும் இந்த கோயிலை தரிசித்தால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதை கலைத்துறையை தேர்தெடுத்த நண்பர்களுக்கு பகிரவும்.

News April 26, 2025

தண்ணீரில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

image

விழுப்புரம், விக்கிரவாண்டியை சேர்ந்தவர் பவுசியா(19). இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மன அழுத்தத்தில் இருந்துவந்த பவுசியா நேற்று தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உறவினர்கள், சென்று பார்த்தபோது பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடப்பதும் தெரிய வந்தது. குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதாக பவுசியா கூறினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 26, 2025

பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT)

News April 26, 2025

ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்ரீ சிவலோகநாதர் ஆலயம்

image

விழுப்புரம் ஸ்ரீ சிவலோகநாதர் ஆலயம், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.

News April 25, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (25.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 25, 2025

விழுப்புரம்: துன்பங்கள் மறைய இங்கு போங்க

image

விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூர் வாலீஸ்வரர் கோயிலின் சிறப்பாக பாலாள ரிஷி கடின தவத்திற்கு திருஆசி தரும் விதமாக சிவபெருமான் இங்கு தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்த கோயிலை தொடர்ந்து வழிபட்டு வந்தால் துன்பங்கள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. துன்பங்கள் மறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதை பகிரவும்

News April 25, 2025

விழுப்புரம் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

image

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04146-240602, திண்டிவனம்- 04147 – 228503, கோட்டக்குப்பம்- 0413-2236150. மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அவரச உதவிக்கு 1091. இதனை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.

error: Content is protected !!