Villupuram

News April 29, 2025

விழுப்புரம்: பெட்ரோல் குண்டு வீசிய வாலிபருக்கு குண்டாஸ்

image

விழுப்புரத்தில் மொபைல் சர்வீஸ் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று (ஏப்.28) கைது செய்யப்பட்டார். விழுப்புரத்தை சேர்ந்த அருண்குமார், கடந்த மார்ச் 28ம் தேதி விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள மொபைல் சர்வீஸ் கடையில் தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தார். டவுன் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று அவரை குண்டாஸில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

News April 29, 2025

கஞ்சனூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

image

மேல்காரணை கன்னியப்பன் மகன் தன்ராஜ்(22). நேற்று அதே பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். கிணற்றில் குதித்தவர் மேலே வரவில்லை. அவருடன் குளித்த நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் கஞ்சனுார் போலீசார், அன்னியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தன்ராஜ் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கஞ்சனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 28, 2025

ஒருமுறை இந்த கோயிலுக்கு போனால் போதும்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில். இங்குள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செல்வம் பெருகும். கடன் பிரச்சினை அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணம் கைகூடும். சாந்த மூர்த்தியாக காட்சிதரும் நரசிம்மரை வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் எந்த பதவியில் யார்?

image

▶️ விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்- ஷேக் அப்துல் ரஹ்மான்( 04146-222470)
▶️ மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் – சரவணன்(04146-223555)
▶️ கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)- பத்மஜா(04146-223432)
▶️ மாவட்ட வருவாய் அலுவலர்- அரிதாஸ்(04146-222128)

முக்கிய அதிகாரிகளின் எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்

News April 28, 2025

விழுப்புரத்தில் அரசு வேலை; இன்றே கடைசி

image

விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 288 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து இன்று(ஏப்.28) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

விழுப்புரத்தில் அரசு வேலை; இன்றே கடைசி

image

விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 288 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து இன்று(ஏப்.28) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

விழுப்புரம் ரயில் நிலையத்தில் குட்கா 30 கிலோ பறிமுதல்

image

விழுப்புரம் ரயில் நிலையம், நேற்று நிஜாமுதின் – கன்னியாகுமரி நோக்கி செல்லும் திருக்குறள் அதிவிரைவு ரயிலில் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் தலைமையிலான ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கழிப்பறை அருகே கேட்பாரற்ற நிலையில், வெள்ளை நிற சாக்கு பை கிடந்தது. சோதனை செய்ததில் 30 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News April 27, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (27.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 27, 2025

நீட் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு

image

இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வு மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதை ஒட்டி திண்டிவனம் Dr.அப்துல்கலாம் நீட் பயிற்சி மையம் சார்பில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 30.04.2025 அன்று காலை 10மணி முதல் 1மணி வரை இலவச நீட் மாதிரித் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என பயிற்சி மைய நிர்வாகி சுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்புக்கு: 9942132049/6380044810

News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!