Villupuram

News May 7, 2025

குடிநீர் பிரச்சனையா? கவலை வேண்டாம்

image

கோடை காலம் தொடங்கி உள்ளதால் விழுப்புரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் பிரச்சனை தொடர்பான புகார் அளிப்பதற்கான புகார் எண் 044 -4567 4567 ஆகும். மேலும், கட்டணமில்லா எண் 1916 மூலம் புகார் தெரிவிக்கலாம். ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க 155340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

குடிநீர் பிரச்சனையா? கவலை வேண்டாம்

image

கோடை காலம் தொடங்கி உள்ளதால் விழுப்புரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் பிரச்சனை தொடர்பான புகார் அளிப்பதற்கான புகார் எண் 044 -4567 4567 ஆகும். மேலும், கட்டணமில்லா எண் 1916 மூலம் புகார் தெரிவிக்கலாம். ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க 155340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 30, 2025

விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்

image

விழுப்புரம் வி.மருதுார் காளியம்மன் கோவில் அருகில், ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைபொருள் பிரிவிற்கு தகவல் கிடைத்தது. தனி தாசில்தார் ஆனந்தன் மற்றும் ஆர்.ஐ.,க்கள் கண்ணன், லட்சுமிநாராயணன்,சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். 25 மூட்டைகளில்,1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக குடோனிற்கு அனுப்பி வைத்தனர்.

News April 30, 2025

அக்ஷய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

image

அன்னை மகாலட்சுமி செல்வம், வளங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆவார். அந்தவகையில் அக்ஷய திருதியான இன்று(ஏப்.30) விழுப்புரத்தில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிலுக்கு சென்று அன்னையின் அருளை பெற்று விட்டு தங்கம் வாங்க செல்லுங்கள். காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். செல்வ வளமும், எல்லா வளமும் கிடைக்கும். ஷேர் பண்ணுங்க

News April 29, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (29.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 29, 2025

விழுப்புரமும் நடிகர் திலகமும்

image

வரலாற்று சிறப்பு மிக்க விழுப்புரம் மாவட்டம் பல முக்கிய மனிதர்களை தந்துள்ளது. அதில் முக்கியமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் பூர்விகம் சூரக்கோட்டை என்பதில் என்ற மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவர் பிறந்தது என்னவோ விழுப்புரத்தில் தான். சிவாஜி நடிகரான பின்பு அவருக்கான பிறப்பு சான்றிதழை விழா ஒன்றில் விழுப்புரம் நகராட்சி அவருக்கு வழங்கியது குறிப்பிடதக்கது. ஷேர் பண்ணுங்க

News April 29, 2025

விழுப்புரம் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தொடர்பாக ஏதேனும் புகார் இருப்பின் 9444982689, 04146-223628, 04146-222292, 04146-220059, 04146-227609 போன்ற எண்களில் மாவட்ட பொது சுகாதார துறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் அல்லது மாநில டோல் பிரீ எண் 104 ஐ தொடர்பு கொண்டு புகார் தெறிக்கலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.

News April 29, 2025

விழுப்புரத்தில் பார்க்க வேண்டிய அம்மன் கோயில்

image

▶️ அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர்

▶️ அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரியம்மன் கோயில்

▶️ வீரவாழியம்மன் திருக்கோயில், விழுப்புரம்

▶️ மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில்

▶️ குமாரகுப்பம் ஜலத்துவாழியம்மன் கோயில்

▶️ திண்டிவனம் அஞ்சாத்தம்மன் கோயில்

▶️ ஓங்கூர் திரௌபதியம்மன் கோயில்

▶️ வளவனூர் கோணம்மன் கோயில்

நீங்கள் செல்ல விரும்பும் நபர்களுடன் ஷேர் பண்ணுங்க

News April 29, 2025

விழுப்புரம்: பெட்ரோல் குண்டு வீசிய வாலிபருக்கு குண்டாஸ்

image

விழுப்புரத்தில் மொபைல் சர்வீஸ் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று (ஏப்.28) கைது செய்யப்பட்டார். விழுப்புரத்தை சேர்ந்த அருண்குமார், கடந்த மார்ச் 28ம் தேதி விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள மொபைல் சர்வீஸ் கடையில் தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தார். டவுன் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று அவரை குண்டாஸில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

News April 29, 2025

கஞ்சனூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

image

மேல்காரணை கன்னியப்பன் மகன் தன்ராஜ்(22). நேற்று அதே பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். கிணற்றில் குதித்தவர் மேலே வரவில்லை. அவருடன் குளித்த நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் கஞ்சனுார் போலீசார், அன்னியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தன்ராஜ் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கஞ்சனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!